districts

img

வாலிபர் சங்க செயலாளர் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கட்சி தர்ணா

சேலம், ஜூலை 24- சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க வலியுறுத்தி போராடிய வாலிபர் சங்க செய லாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி யவர்ளை கைது செய்ய வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணாவில் ஈடு பட்டனர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி. பெரியசாமி மீது லாட்டரி சீட்டு விற்பனை கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியது. படு காயமடைந்த பெரியசாமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க  காவல் துறையை வலியுறுத்தியபோது, தாக் குதல் நடத்திய சமூக விரோதிகளை விட்டு விட்டு, வேறு சிலரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரச்சனையில் ஆள் மாறாட்டம் பெரிய அளவில் நடந்துள்ளது.  எனவே இப்பிரச்சனையில் அரசு உரிய தலையீடு செய்து தடை செய்யப்பட்ட லாட் டரி விற்பனையை தடுத்து நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத் திய சமூக விரோதிகளை கைது செய்ய வேண் டும். பாதிக்கப்பட்டவருக்காக போராடியவர் கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும் பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் திங் களன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர் கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.