districts

img

வாலிபர் சங்க தலைவர் மீது தாக்குதல்: சேலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 16- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் மாவட்ட செயலாளரை தாக்கி யவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்டம் முழுவதும் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு, கஞ்சா விற்பனை, சட்டவிரோதமாக  ரேசன் அரிசி கடத்தல் போன்ற சமூக நலனுக்கு எதிரான செயல்களை கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் தொடர்ச்சியாக போராட்ட களம் கண்டு வருகிறது. இந்நிலையில், லாட் டரி சீட்டு வியாபாரி சதீஷ் என்பவரின்  தூண்டுதலின் பேரில், வாலிபர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் பெரிய சாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனை யில் சிகிக்சை பெற்று வருகிறார். இத் தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் சேலம் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி பனமரத்துப்பட்டி பகுதியில் சிபிஎம் செயலாளர் சுரேஷ் குமார்  தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர் கள் பங்கேற்றனர். கொங்கணாபுரம், செக்குமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர்கள் எஸ்.முத்துசாமி, மு. பெரியண்ணன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். ஓமலூர் பேருந்து நிலையத்தில் செயலாளர் ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், வாலிபர் சங்க மாவட்ட பொருளா ளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் பங் கேற்று, கண்டன முழக்கங்களை எழுப்பினர். காடையாம்பட்டி பகுதி யில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், வாலிபர் சங்க செய லாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.