மேட்டுபாளையம், ஆக.21- அரசு வனக்கல்லூரி சுற்றுச்சுவரை உடைத்த பாகுபலி யானை, உள்ளிருந்த பொம்மை யானையை நிஜ யானை என நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை நடமாடி வருகிறது. காட்டு யானைகளின் இயல்புக்கு மாறாக இந்த ஒற்றை ஆண் யானை பல ஆண்டு களாக இடம் பெயராமலும் பிற யானைக ளோடு இணையாமலும் தன்னந்தனியே மேட் டுப்பாளையம் பகுதியினை சுற்றி வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று இரவு காட்டை விட்டு வெளியேறிய பாகுபலி யானை மேட் டுப்பாளையம் - கோத்தகிரி சாலையை கடந்து அங்கிருந்த அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அருகே கடந்து சென் றுள்ளது. அப்போது கல்லூரி வளாகத்தினுள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த யானை உருவ பொம்மையை பார்த்த பாகுபலி அதனை நிஜ யானை என நம்பி அதனை ஆவேசத்துடன் பிளிறி விரட்ட முயன்றுள்ளது. இருளில் யானை உருவம் அசையாமல் நிற்பதை கண்ட பாகு பலி மிகுந்த கோபத்துடன் கல்லூரியின் சுற் றுச்சுவரை உடைத்து கொண்டு, தன் உயரம் கொண்ட யானை பொம்மையை தாக்க துவங் கியது. நிஜ யானையின் ஆவேச தாக்குதல் காரணமாக பொம்மை யானை கீழே சாய்ந் தது. பின்னர், கோபம் தணிந்த பாகுபலி கல் லூரியை விட்டு வெளியேறியுள்ளது. தத்ரூப மாக இருந்த யானை பொம்மையை உண்மை யான யானை என்றும் தன் எல்லைக்குள் புதிய யானை வந்துள்ளதாகவும் கருதியே காட்டு யானையான பாகுபலி சுவரை உடைத்து உள்ளே சென்று தாக்குதல் நடத்தி விட்டு சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக் கின்றனர். இருமுறை கும்கி யானைகளை வரவ ழைத்து பாகுபலி யானையை பிடிக்க வனத் துறை முயற்சித்த காரணத்தால் தன்னை பிடிக்க வந்த கும்கி யானையாக பொம்மை யானையினை பாகுபலி நினைத்திருக்கலாம். ஏற்கனவே, அரசு மரக்கிடங்கில் வேழம் யானைகள் பூங்கா அமைக்கும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட யானை பொம்மைகளை பாகுபலி யானை இதே போல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவ மாணவியர் பயி லும் கல்லூரி சுவற்றை உடைத்து உள்ளே புகுந்துள்ள பாகுபலி யானையின் நடமாட் டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்கா ணிக்க துவங்கியுள்ளனர்.