திருப்பூர், மே 2- திருப்பூரில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பார் உரிமையாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இருவர் கைது செய்யப் பட்டனர். தொழிலாளர் தின (மே 1) விடுமுறை நாளில் திருப்பூரில் உணவகத்தில் வைத்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்த தாக தகவல் கிடைத்தது. இதை செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 18 தமிழ் நாடு தொலைக்காட்சி திருப்பூர் செய்தியாளர் பாலாஜி தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஞாயிறன்று ஆனந்தன், நாகராஜ் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் திங்களன்று காட்டுராஜா, அஜித்குமார் என்ற மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள சந்தை யில் மது விற்பனை செய்தது தொடர்பாக கடை உரிமை யாளர் மகாலிங்கம் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. செய்தியாளரை தாக்கிய வழக்கில் இது வரை 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.