கோவை, ஜன.7- அத்திக்கடவு - அவிநாசி திட்ட சோதனை ஓட்டத்தின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்ட தால் தண்ணீர் ஆறாய் தெருவில் ஓடியது. அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளன.மேலும், குழாய் பதிக்கும் பணிகள் முழுவதும் நிறைவு பெற் றுள்ளதால், அத்திக்கடவு தண்ணீரை இத்திட் டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள குளம், குட் டைகளில் நிரப்பி சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஞாயிறன்று அன்னூர் அடுத்துள்ள குமார பாளையம் குட்டைக்கு தண்ணீர் நிரப்பி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, தண்ணீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட் டது. இதனால், குழாயில் இருந்து பீய்ச்சிய டித்த தண்ணீர் தெருவெங்கும் வெள்ளமென பாய்ந்தது. மேலும், சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் அருவி போல கொட்டுவதால் அப்ப குதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தக வல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அத்திக் கடவு - அவிநாசி திட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குழாய் உடைப்பை சரி செய்யும் பணி யில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் அத்திக்கடவு அவினாசி திட்ட சோதனை ஓட்டத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக் கது.