பேரவை பொதுக்கணக்கு குழு ஈரோடு வருகை
ஈரோடு, ஜுன் 4- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 16 ஆவது பேரவை பொதுக்கணக்கு குழு ஜீன் 8 ஆம் தேதியன்று ஈரோடு மாவட் டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. பேர வையின் பொதுக்கணக்கு குழு கு.செல்வபெருந்தகை தலை மையில் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் 2014-15 முதல் 2019-22 வரையுள்ள ஆண்டுகளுக் கான அறிக்கைகளில் உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சில தணிக்கைப் பத்திகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்களுடன் கலந்து ரையாடல் மற்றும் சில திட்டப்பணிகளை பார்வையிட உள் ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை வலுப்படுத்த மகளிருக்கு அழைப்பு
ஈரோடு, ஜுன் 4- ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை வலுப்படுத்த மகளிருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத் துள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் பவானி, சத்தியமங்கலம், சென்னிமலை மற்றும் தாளவாடி ஆகிய 5 வட்டாரங்களில் 77 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டப்பகுதிகளில் சுய உதவிக்குழு உறுப்பி னர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வரும் சிறு,குறு நுண் நிறுவன செயல்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள சத் தியமங்கலம் வட்டார ஊராட்சிகளில் இருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் செயல்பாட்டில் உள்ள மகளிர் குழு சார்ந்தவராகவும், 25 முதல் 45 வயதுக்குட்பட்டு அதே ஊராட் சியை சேர்ந்த இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற, ஸ்மார்ட் போன் வைத்துள்ள, வாழ்வாதார வளர்ச்சி, தொழில் மேம்பாட்டு செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவராக இருத் தல் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அந்தந்த ஊராட்சிக ளின் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற ஜீன் 7 ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள் ளார்.
பள்ளி, கல்லூரி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு, ஜுன் 4- ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தனியார் பொறி யியல் கல்லூரி மற்றும் கோபி, பவானி ஆகிய பகுதியில் உள்ள பள்ளி பேருந்துகளை கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி ஆய்வு செய்தார். அப்போது பள்ளி பேருந்துக ளில் அவசரகால வழி உள்ளதா எனவும், அரசு விதிமுறைகள் படி உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பேருந்து ஓட்டுநர்களிடம் அதிக வேகத்தில் செல்லக் கூடாது, அதிகமாக பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லக் கூடாது, பேருந்துகளில் உதவியாளர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது, கோபி ஆர்டிஓ முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, கண்ணன், சுகந்தி, போக்குவரத்து ஆய்வாளர் கஜினி ஆகியோர் உடனிருந்தனர்.
ரூ.21.73 லட்சத்துக்கு வெண் பட்டுக்கூடுகள் விற்பனை
தருமபுரி, ஜூன் 4- தருமபுரி அரசு அங்காடியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.21.73 லட்சத்துக்கு வெண் பட்டுக் கூடுகள் விற்பனையாகின. பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தருமபுரி நால் ரோடு அருகே பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பட்டுக்கூடுகள் ஏல முறையில் விற்பனை செய்யப்படும். தருமபுரி மட்டு மல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் இங்கு பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வர். பல்வேறு ஊர்களை சேர்ந்த உற்பத்தியாளர்களும் இந்த அங்கா டியில் ஏல முறையில் அதன் தரத்துக்கு ஏற்ப பட்டுக்கூடுகளை விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்பவர்களி டம் விற்பார்கள். வெள்ளியன்று நடந்த ஏலத்தில் 49 விவசாயி கள் தங்களது பட்டுக்கூடுகளை விற்ப னைக்கு கொண்டு வந்தனர். 3 ஆயிரத்து 883 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கூடுகளின் விலை அதிகபட்சமாக ரூ.681க்கும், குறைந்த பட்சமாக ரூ.361 க்கும், சராசரியாக ரூ.559 க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த வகையில் வெள்ளியன்று ஒரே நாளில் ரூ.23.73 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
கோவை, ஜூன் 4- நீலகிரியை சேர்ந்தவர் சகாயநாதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் கார மடை அருகே உள்ள ஆசிரி யர் காலனி பாலாஜி நகர் பகுதியில் குடி வந்துள்ளார். சகாயநாதன் தனது குடும்பத் துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட் டிற்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது சகாயநா தன் வீட்டின் பூட்டு உடைத்தி ருப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த அலமாரியை உடைத்து அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சகாயநாதன் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர் கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமிரா பதிவு களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.
24 மையங்களில் குடிமைப்பணிக்கான முதல் நிலைத்தேர்வு
கோவை, ஜூன் 4- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை 9 ஆயிரத்து 447 பேர் எழுத உள்ளனர். இதற்காக 24 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வை கண்காணிக்கும் பணியில் ஆட்சியர் சமீரன் தலைமையில் 8 உதவி ஆட்சியர்கள், 24 வட்டாட்சியர்கள், 40 துணை வட்டாட்சியர்கள், 414 அறை கண்காணிப்பாளர் கள் ஈடுபடுகிறார்கள். தேர்வை பார்வையிட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ சண்முகராஜா, மருத்துவர் வள்ளலார் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டு உள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் குடிமைப் பணிக்கான முதல் நிலை தேர்வு இன்று நடத்தப்படுகிறது. காலை தேர்வுக்கு காலை 8.30 மணிக்குள்ளும், மதிய தேர்வுக்கு பிற்பகல் 1.30 மணிக் குள்ளும் தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு வளாகத்துக்குள் செல்போன், டிஜிட்டல் கைக் கடி காரம் உள்ளிட்டவைகளை எடுத்து வர அனுமதி இல்லை. கருப்பு மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு உணவக உரிமையாளர் மீது வழக்கு
கோவை, ஜூன் 4- கோவை அடுத்த மலுமிச்சம்பட்டியில் உள்ள உணவ கம் மற்றும் தொண்டாமுத்தூர் நரசீபுரம் சாலையில் உள்ள கோழி இறைச்சி கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருப்பதாக தேசிய குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட கடைகளுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு 13 வயது மற்றும் 14 வயதுடைய குழந்தை தொழிலாளர்கள் இருவர் பணியாற்றி வந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து இருவரையும் தேசிய குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகள் மீட்டனர். பின்னர், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதாக செட்டிபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுதா கரன், மற்றும் தொண்டாமுத்தூர் பாண்டியன் வீதியை சேர்ந்த அப்துல் சமீது ஆகிய இருவர் மீதும் காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
மானியத்துடன் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
ஈரோடு, ஜுன் 4- தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை யின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுதுநீக்கும் பராமரிப்பு மையம் மானி யத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மையங்கள் அமைக்க போதிய இட வசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிரா மப்புற இளைஞர்கள், தொழில்முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையிலுள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சி யரின் மாவட்ட அளவிலான செயற்குழுகூட்டத்தில் ஒப்பு தல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானி யத்தில் அமைத்து தரப்படும். இம்மையங்கள் ரூ.8.00 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீதமானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங் கப்படும். பின்னர், சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத்தொகையினை பயனாளியின் வங்கிக்கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு தொலைபேசி எண் 0424-2904843, 0428-5290069 இல் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
லாட்டரி சீட்டு விற்பனை - 3 பேர் கைது
ஈரோடு, ஜூன் 4- லாட்டரி சீட்டு விற் பனையில் ஈடுபட்ட மூன்று பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லாட்டரி சீட்டு விற்பனை யில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் தீவிர நடவ டிக்கை எடுத்து வருகின்ற னர். இந்நிலையில் ஈரோடு பவானி மெயின் ரோட்டில் தமிழக அரசால் தடை செய் யப்பட்ட வெளிமாநில லாட் டரி சீட்டு விற்பனையில் 3 பேர் கொண்ட கும்பல் ஈடு பட்டு வருவதாக கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கருங்கல் பாளையம் போலீசார் சம் பவ இடத்துக்கு சென்ற போது 3பேர் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதைய டுத்து சிவக்குமார், சிவா வைரமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட னர்.
4 நாள் சுற்றுப்பயணமாக உதகை வரும் தமிழக ஆளுநர்
உதகை, ஜூன் 4- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் சுற்றுப்பயண மாக உதகைக்கு ஞாயிறன்று (இன்று) வருகிறார். ஞாயிறு காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், மதியம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். இதைத் தொடர்ந்து கோவையில் இருந்து மேட்டு பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக சாலை மார்க்கமாக கார் மூலம் கிளம்பி, உதகைக்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்கிறார். பின்னர் உதகை அரசு தாவரவி யல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகை யில் அன்றைய தினம் இரவு ஓய்வெடுக்கிறார். இந்நிலையில் கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இதன் பின்னர் 9ஆம் தேதி காலையில் அவர் மீண்டும் கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். ஆளுநர் உதகை வருகையை யொட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், கோடப்பமந்து, கோத்தகிரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இருசக்கர வாகனம் ஓட்ட வைத்த தந்தை மீது வழக்கு
சேலம், ஜூன் 4- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம் பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (40), மெக்கானிக். இவர் தனது 7 வயது மகன் மோகித்துக்காக பழைய இருசக்கர வாகனத்தை வாங்கி அவற்றை சிறியதாக மாற்றி வடிவமைத் துள்ளார். கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில் 40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அந்த இரு சக்கர வாகனத்தை ரேஸ் பைக் போல உருவாக்கி மகனுக்கு அதனை பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான மோகித் இருசக்கர வாகனத்தை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதற்கிடையே தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன், தீவட் டிப்பட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதில் சிறு வன் தந்தையை அமர வைத்து இருசக்கர வாகனம் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
38 சதவிகிதம் பவர்டேபிள் கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
திருப்பூர், ஜூன் 4 - திருப்பூரில் தென்னிந்திய பன்ியன் உற்பத்தியாளர் சங் கத்தினருடன் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் நடத் திய பேச்சுவார்த்தையில் நான்கு ஆண்டுகளுக்கு 38 சதவி கிதம் ்தையல் கூலி உயர்வு உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி பனியன் உள்ளாடைகளுக்கான தையல் கூலி இந்த ஆண்டு (2022) 17 சதவிகிதம், அடுத்தடுத்த மூன்று ஆண் டுகளுக்கு தலா 7 சதவிகிதம் வீதம் என மொத்தம் 38 சதவிகிதம் கூலி உயர்வு வழங்கப்படும். இதில் ஜட்டி வகை களுக்கு முதல் வருடம் 14 சதவிகிதமும், அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலா 7 சதவிகிதமும் கூலி உயர்வு வழங்க வும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஒன்பதாவது சுற்றுப் பேச்சுவார்்த்தை சைமா அலுவல கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், பொருளாளர் ராமசாமி மற்றும் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நந்தகோபால், செயலாளர் முருகேசன், துணைத் தலை வர் நாகராஜ், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் பங்கேற்ற னர். இந்த ஒப்பந்தம் ஜூன் 6ஆம் தேதி திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று பவர்டேபிள் சங்கத்தினர் தெரிவித்த னர்.
கருத்துக் கேட்புக் கூட்டம் தள்ளிவைப்பு
திருப்பூர், ஜூன் 4 – திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் க.ச.எண். 688 (பி), 689,1, 2(பி), 689,3யு(பி), 688(பி), 657/7 என்ற இடத்தில் மைவாடி கிராம சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குழுமம் என்ற நிறுவனம் 7.59.5 ஹெக்டர் அளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க அனுமதி கோரியுள்ளது. இது குறித்து பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்துவ தாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தமிழக அரசின் கணக்கு குழுவின் கூட்டம் மற்றும் ஆய்வு நடைபெற இருப்பதால் மேற்படி கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூன் 30ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.
மாரியம்மன் கோயிலில் தங்கநகை திருட்டு
அவிநாசி, ஜூன் 4- சேவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த காணிக்கை, தங்க தாலி உள் ளிட்டவற்றைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவிநாசி வட்டம் சேவூர் முறியாண்டம்பாளையம் காம ராஜர் நகரில் பிரசித்தி பெற்ற புற்றுக்கண் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் அண்மை யில் நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை வழக்கம் போல பூஜைகள் முடிந்து கோயில் கதவு அடைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை கோயிலில் 2 கதவு பூட்டுகள், பிரதான உண்டியல் உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த சோதனை மேற்கொண்டதில், சிலையின் தங்க தாலி, உண்டியல் காணிக்கை உள்ளிட்டவற்றை மர்ம நபர் கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சேவூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
மூலனூரில் ரு.2 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், ஜூன் 4 - மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரு. 2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங் களை சேர்ந்த 778 விவசாயிகள் பருத்தியை விற்பனைக் காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த 20 வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரு.14 ஆயிரத்து 56ம், குறைந்தபட்ச விலையாக ரு. 9 ஆயிரத்து 80ம், சராசரி விலையாக ரு.10ஆயிரத்து 50க்கும் விலை போனது. மொத்தம் 6594 மூட்டைகள் 2 ஆயிரத்து 164 குவிண்டால் பருத்தி ரூ. 2 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 883க்கு விற்பனையானது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப் பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 17 பேர் காயம்
தாராபுரம், ஜூன் 4- தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் காய டைந்தனர். தாராபுரம் அடுத்த காணிக்கம்பட் டியை சேர்ந்த 17 பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் குண்டடம் அருகே உள்ள பெல்லம்பட்டிக்கு நிலக்கடலை பறிப்பதற்காக வேனில் சென்றனர். வேனை பெல்லம்பட்டியை சேர்ந்த நவீன்குமார் (19) என்பவர் ஓட்டி வந் தார். வேன் பெல்லம்பட்டி அருகே வந்த போது சாலை திருப்பத்தில் ஒட்டு நரின் காட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள் ளனானது. அப்போது காயமடைந்த வர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந் தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் குண்டடம் காவல்நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த குண்டடம் காவல்து றையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு தாரா புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாராபுரத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்ற காணிக் கம்பட்டியை சேர்ந்த காளியம்மாள் (50), தேவி (37), இந்திராணி (39), நாச்சம்மாள் (60) உள்ளிட்ட 14 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். 3 பேர் தாராபுரம் அரசு மருத்துவ மனையில் சிசிக்சை பெற்று வருகின்ற னர். இதுகுறித்து குண்டடம் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார். தொடரும் விபத்து தாராபுரம் பகுதியில் சரக்கு வேன்க ளில் ஆட்களை ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகு றித்து அப்போதைக்கு வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறை யினர் பின்னர் கண்டுகொள்ளாமல் விட் டுவிடுகின்றனர். இதனால் வேன் ஓட்டு நர்கள் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளது.
கரூர் ஏற்றுமதியாளரிடம் ரூ.1.25 கோடி நூல் மோசடி பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் கைது
திருப்பூர், ஜூன் 4- கரூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதி யாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்பி லான நூலை பெற்று மோசடி செய்த பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட் டம் செம்மடையை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). இவர் கரூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகி றார். இவர் பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி (40) நடத்தி வருகிற சங்கீதா மில்ஸ் நிறுவனத்தில் நூல் கொடுத்து, துணியாக மாற்றி வந் துள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 1 லட்சம் கிலோ நூலை, துணியாக மாற்றி தரும்படி கொடுத் துள்ளார். ஆனால் நூலை பெற்றுக் கொண்டு ராமமூர்த்தி துணியாக மாற்றி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நூலின் மதிப்பு ரூ.1.25 கோடி யாகும். மேலும், இது தொடர்பாக அசோக் ராம்குமார் கேட்கும் போது, அவரை ராமமூர்த்தி மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும் படி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அசோக் ராம்குமார் புகார் கொடுத்தார். அதன்படி ராமமூர்த்தி மீது கடந்த 30ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ராமமூர்த் தியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், ராமமூர்த்தியின் மில்லில் காசாளராக பணியாற்றிய சங்கர் கணேஷ் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குண்டடம் வங்கியில் கொள்ளை முயற்சி: மூன்று பேர் கைது
தாராபுரம், ஜூன் 4 - தாராபுரம் அடுத்த குண்டடத்தில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடு பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட னர். தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் கோவை ரோடு அய்யப்பன் கோவில் வீதியில் கூட்டுறவு நிலவள வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே 31 அன்று அதிகாலை மர்ம நபர்கள் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் வங்கியில் ரொக்க பணம் ஏதும் இல்லாததால் திரும்பி சென்றனர். மறுநாள் காலை வழக்கம்போல் வங்கிக்கு வந்த வங்கி செயலாளர் பீரோ மற்றும் டேபிள்கள் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குண்டடம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் குண்டடம் காவல் ஆய்வாளர் செல்வம் (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை முயற்சி யில் ஈடுபட்ட மர்மநபர்களை சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தேடிவந்த னர். இந்நிலையில் குண்டடம் அருகே சூரியநல்லூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டபோது சந்தேகத்திற்கிடமான நிலையில் வந்த மோட்டார் சைக் கிளை நிறுத்தினர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென் றனர். அவர்களை துரத்தி பிடித்த போலீ சார் அவர்களிடம் நடத்திய விசாரணை யில் கர்நாடக மாநிலம் கோலார் கள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சு நாத் (30), கொசன்நகரா பகுதியை சேர்ந்த தேவராஜா (37), கொல்லோ கட்டா பகுதியை சேர்ந்த அஸ்வத் (31) என்பதும், வங்கியில் கொள்ளை முயற் சியில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்த போலீசார் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.