districts

img

கிழக்குக்கரை பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் கேட்டு

சேலம், பிப்.26- மேட்டூர் அணையிலிருந்து கிழக்குக்கரை நீர் பாசன வாய்க் காலில், 15 நாட்களுக்கு தண்ணீர்  திறந்து விடக்கோரி, சங்ககிரி  பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாச னத்திற்கும், கிழக்கு மற்றும் மேற்கு  கரை வாய்க்கால்களில் ஆண்டுதோ றும் ஜூலை மாதம் தண்ணீர் திறந்து  விடுவது வழக்கம். இந்நிலை யில், இந்த ஆண்டு மேட்டூர் அணை யிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததால், கிழக்குக்கரை நீர்ப் பாசனத்திற்கு உட்பட்ட சுமார் ஒன்ப தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக்  கொண்ட விவசாயிகள் தண்ணீ ரின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர்.  மேலும், வறட்சி காலம் தொடங் கியதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டு மின்றி, சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கிழக்குக்கரை நீர் பாசன வாய்க் கால் பகுதிகளான பொன்னம்பா ளையம், கோனேரிப்பட்டி, காவே ரிப்பட்டி, அரசிராமணி, புள்ளாக வுண்டம்பட்டி, செட்டிபட்டி உள் ளிட்ட பகுதிகளில் தற்போது குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கால்நடை களுக்குக் கூட குடிநீரின்றி தண்ணீர்  பஞ்சம் ஏற்படும் அபாயம் உள் ளது. எனவே, தமிழக அரசு குடிநீர்  தேவைக்காக மேட்டூர் அணையிலி ருந்து 15 நாட்களுக்கு கிழக்குக் கரை நீர்ப்பாசன வாய்க்காலில், தண்ணீர் திறந்து விட வேண்டும்  என்பதை வலியுறுத்தி, அரசிரா மணி குள்ளம்பட்டி பகுதியிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயி கள்  தரையில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். அதோடு, பொதுப் பணித்துறை அலுவலரிடம் கோரிக்கை மனுவையும் அளித்த னர்.