சேலம், மார்ச் 4- தாண்டவனூர் அரசு அங்கன்வாடி மையத்தில் அடிப் படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி, இரண்டு வயது சிறுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அனைவ ரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது இரண்டு வயது மகள் யாழிசை, தாண்டவனூர் அரசு அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழிசை, தனது தந்தையுடன் வந்து புகார் ஒன்றை அளித்தார். அதில், அங்கன்வாடி மையத்தில் குடிநீர் வசதி, கை கழுவும் வசதி மற்றும் கழிப்பறை பயன்படுத்த தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர கத்தில் மனு அளித்தார். இதுகுறித்து குழந்தையின் தந்தை கருணாகரன் கூறுகை யில், தனது குழந்தை படிக்கும் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் சரியான முறையில் இல்லை. இதனால் அங்கு சுகாதார சீர் கேடுகள் ஏற்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு அடிக் கடி உடல்நிலை சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே வட்டார அலுவலர்களிடம் மனு அளித்தோம். ஒரு வார காலத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டனர். இருப்பினும், மானத்தாள் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்த தர மறுக்கி றது என்றார்.