திருப்பூர், ஏப்.20- திருப்பூரில் ஆசர் மில் தியாகி அஞ்சா நெஞ்சான் பழனிச்சாமியின் 74 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் எழுச்சியுடன் கடைப்பிடித்தனர். திருப்பூர் தியாகி பழனிசாமி நகரில் அமைந்துள்ள தியாகி பழனிசாமியின் நினைவு ஸ்தூபிக்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அணி திரண்டு இருந் தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என் கோபாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக இந்நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செய லாளர் பி.ஆர்.கணேசன் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் தியாகி பழனிச்சாமியின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். குறிப்பாக, தியாகி பழனிச்சாமி உள்ளிட்ட தியாகிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தி னால் தொழிலாளிகளுக்கு உரிமைகள் பெறப் பட்டன. இன்றைய தினம் பாரதிய ஜனதா அரசு தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை பறித்து வருகிறது. தியாகி பழனிச்சாமியின் தியாகத்தை நினைவு கூறுவதன் மூலமாக இளைய தலைமுறையினரிடம் அவர்களது பணிகளை கொண்டு செல்ல வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை பாது காக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து மலரஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி, சிஐடியு பஞ்சாலை தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.பழ னிச்சாமி, மாவட்டச் செயலாளர் சி.ஈஸ்வர மூர்த்தி, கட்சியின் வடக்கு மாநகரச் செயலா ளர் பி.ஆர்.கணேசன், தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால், வேலம்பாளையம் நக ரச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, வை. ஆனந்தன், இடுவாய் ஊராட்சி மன்றத் தலை வர் கே.கணேசன், மாநகரக்குழு உறுப்பினர் கள் பா.சௌந்தரராஜன், எஸ். ராஜேந்திரன், ஒய்.அன்பு, கே.நாகராஜ், ஆர்.நந்தகோபால், வளர்மதி, துரை சம்பத், ராம் ஆனந்த் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சி அணியினர் திர ளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். முடி வில் கிளைச் செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.