districts

img

தொழில் வாரியாக சாதிகளை கட்டமைத்தது ஆரியம்

கோவை, மார்ச் 11- கலப்பு இனத்தின் வாரிசுகளாக தோன்றியதே தமிழ் சமூகம், இந்த சமூகத்தினை வெல்வதற்காகவே,  வர்க்க, சாதி அமைப்புகளாக தொழில் வாரியாக சாதிகளை கட்டமைத்தது ஆரியம் என நூல்  வெளியீட்டு நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கௌரவ தலைவர் பி.சம்பத் உரை யாற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் கௌரவ தலைவர்  பி.சம்பத் எழுதிய சாதி – வர்க்கம் -  விடுதலை நூல் அறிமுக விழா கோவை, காந்திபுரம் தந்தை பெரி யார் திராவிடர் கழக அலுவல கத்தில் வெள்ளியன்று நடை பெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை  தலைவர் யு.கே.சிவஞானம் தலை மை ஏற்றார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி வரவேற்பு ரையாற்றினார். இந்நிகழ்வில், நூலை அறி முகம் செய்து தந்தை பெரியார்  திராவிடக் கழகத் தலைவர் கு.இரா மகிருட்டிணன், ஆதித்தமிழர் பேர வையின் மாநில பொதுச்செய லாளர் ரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண் மணி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ரிமை இயக்கத்தின் மாவட்ட செய லாளர் அஸ்ரப் அலி, புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் மலரவன்,  திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் நேருதாஸ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில், தபெதிக தலைவர் கு. இராமகிருட்டிணன் பேசுகையில், சனாதன வாதிகளுக்கு எதிராக  அனைத்து சாதியினரையும் இணைத்து போராடி தீர்வை காணு கிற இயக்கமாக தீண்டாமை ஒழிப்பு  முன்னணி உள்ளது.  தமிழ கத்தில் கிராமம், ஊரக பகுதிகளில்  மட்டும் தீண்டாமை கொடுமை நடை பெறவில்லை.  ஐஐடி. ஐஐஎம்-களில் இந்த கொடுமைகளினால் உயிரிழப்புகள் நேரிடுகிறது.  இங்கு  பொருளாதார பிரச்சனை காரண மல்ல,  சாதிய வன்மம் திகழ்கிறது.  இதற்கெதிராகவும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

இந்நிகழ்வில் ஏற்புரையாற்றி பி.சம்பத் பேசுகையில்,  தமிழகம், இந்தியாவில் சமூக நீதி போராட் டங்களில் அம்பேத்கரை  இணைக் காமல் தொடர முடியாது. திராவிட  இயக்கங்கள் இங்கு பெறும் பங் காற்றினாலும் சில போலி திராவி டர்கள் உள்ளனர். அவர்கள் வெளி யில் திராவிட போர்வையில் வாழ்ந் தாலும், ஆண்ட பரம்பரை பெருமை  பேசுகின்றவர்களை நாம் காண  முடிகிறது. இவர்கள் சாதியை  எதிர்க்கவே இல்லை, பிற்படுத்தப் பட்ட மக்கள் தங்களை உயர்ந்த வகுப்பினர் என பெருமை பேசி வரு வதை பார்க்க முடியும். தாழ்த்தப் பட்ட மக்களை யாரேனும் சாதியை  சொல்லி திட்டினால், பிரமாணர் களாக அல்லாதலர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பார்த்து நீங்களும் கீழ் சாதி தான் என திட்ட சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார். இங்கு அத்தனை சாதி களுக்கும் கீழ் சாதி பட்டம் தான்  சூத்திரர்கள்.  அப்படி ஒரு அமைப் பை சனாதனம் உருவாக்கி உள்ளது. ஆரியர்கள் இங்கு வந்த வுடன் சாதி அமைப்பு முறைகளை  உருவாக்கவில்லை,  பல நூற்றாண் டுகள்,  தலைமுறைகளை கடந்து   வர்க்க அமைப்பு முறையான தொழில் அமைப்பை ஏற்படுத்தி பாகுபாட்டை உண்டாக்கியது. இது  தொடர்ந்து சிந்து சமவெளி நாக ரிகத்தை ஓழித்துகட்டிவிட்டது.,   தமிழ் மக்கள் இயற்கையை  தெய்வமாக வழங்கி வந்தவர்கள்.  முந்தைய காலத்திலேயே உருவ வழிபாடு, சிற்ப வழிபாடுகளை கொண்டவர்களாக இருந்தனர்,  ஆனால் இந்த வழிபாட்டு முறைக்கு  மதம் என்ற பெயர் கிடையாது. குல தெய்வம், வழிகாட்டி தெய்வங்கள்  மட்டுமே இருந்து வந்தது.  மீக நீண்ட  போராட்ட மாற்றங்களுக்கு பிறகு, கலப்பு இனத்தின் வாரிசுகளாக தோன்றியதே தமிழ் சமூகம்,  இந்த  சமூகத்தினை வெல்லவே,  வர்க்க  சாதி அமைப்புகளாக தொழில்  வாரியாக சாதிகளை கட்ட மைத்தது ஆரியம். பார்ப்பனர் களுக்கு மேல் சாதியில்லை ஆனால் அதற்கு கீழ் அனைத்து சாதி களும் அடங்கும், இறுதியாக இருப்பது தாழ்த்தப்பட்ட சமூகம்,  மற்ற இடை நிலை சாதிகள் அனைத்தும் தங்கள் சாதிக்கு கீழ்  சாதி இருப்பதாக தங்களை பெரு மைப்பட்டுக் கொள்கின்றனர். வைசியர்கள்,  சூத்திரர்கள்,  தாழ்த் தப்பட்டவர்கள் என வரையறை கொடுத்தது அடக்குமுறைக்கான தந்திரமாக இந்து மதத்தை ஆரி யர்கள் கட்டமைத்தனர்.

இந்த சமூக அடக்குமுறையை தடுக்க குறிவைத்து, மற்ற அனைத்து சாதி, சமூக மக்களை  இணைத்து போராட முடிவு செய்து தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு உருவாக்கப்பட்டு தொடர்ந்து போராடி வருகிறது. இப்படியான அடக்குமுறை சாதிய  வன்கொடுமைகள் இந்தியாவில் ஆய்வு செய்கையில், பீகார் மாநி லத்தில் ஆண்டுக்கு 28000 வழக்கு கள், ராஜஸ்தானில் 19000 வழக்கு கள்,  உத்திர பிரதேசத்தில் 32000,  வழக்குகள் பதிவாகின்றன, மற் றொரு புறம் திராவிட அரசியல் வலுவாக இருக்கின்ற பிறகும் தமிழகத்தில் 12000 வழக்குகள் பதி வாகின்றன என்பது வேதனையான விஷயம். இடதுசாரிகள் ஆட்சி புரிந்த மேற்குவங்கம்,  திரிபுரா, கேரளா மாநிலங்களில் இந்த வழக்குகள் மிக குறைவு என்பதே, இதற்கான மூல காரணம் தாழ்த்தப் பட்ட மக்கள் பிற எந்த சாதி யையைம் சமூகச்தையும் சார்ந்து  வாழவில்லை,  அந்த மாநிலங்களில்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம்,  நில உச்சவரம்பு சட்டத்தின் மூல மாக நிலம் உடமை வழங்க பட் டுள்ளது. தற்போது  மிகப்பெரிய சவாலாக உழைக்கும் மக்களை பிரித்தாலுகின்ற சூழலை பாஜக பயன்படுத்துகிறது,  நாம் இந்த சாதிய அமைப்பு முறைகளை அடித்து நொறுக்குவோம்,  சாதி யை ஒழிப்போம் அதற்கு முற் போக்கு பெரியாரிய, அம்பேத் காரிய அமைப்புகள் இணைந்து கைகோர்க்க வேண்டும் என்றார். முடிவில், டி.சுப்ரமணியம் நன்றி  கூறினார். இந்நிகழ்வில், மார்க்சிய,  பெரியாரிய, அம்பேத்கரிய அமைப் பினர் ஏராளமானோர் பங்கேற் றனர்.