நாமக்கல், அக்.14- நாமக்கல் அருகே உள்ள கே.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் பெண் பேராசிரியர்களுக்கு செயற்கை நுண் ணறிவு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு, கல்லூரியின் தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமை ஏற்றார். கல்லூரியின் முதல்வர் பி. செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். பசிபிக் மற்றும் ஜப்பான் இன்டெல் கம்பெனியின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கே.வி.ஸ்ரீராம், செயற்கை நுண்ணறிவு குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் மற்றும் கே.எஸ்.ஆர் குழுமத்தில் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் இருந்து 100 பெண் பேராசி ரியைகள் கலந்து கொண்டனர்.