districts

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா பொய்யான புகாரால் கைது: மனைவி குற்றச்சாட்டு

சேலம் பிப் 11 -  தன்னையும், தனது இரண்டு குழந் தைகளும் விரட்டி விட்ட கணவர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி காவல் துறை  வாகனம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்  துறையினர் செய்தனர். சேலம் மாவட்டம், திருவாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் – சாந்தி தம்பதியின் இரண்டாவது மகள் ஆர்த்தி. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு கண்ணன் என்பவருக்கு, ஆர்த் திக்கும் திருமணம் செய்து வைக்கப் பட்டது. இவர்களுக்கு இரண்டு ஆண்  குழந்தைகள் உள்ளனர். இதனிடையே,  கொரோனா பெரும் தொற்றால் ஆர்த்தி யின் கணவர் கண்ணன் உயிரிழந்தார். இதையடுத்து ஆர்த்திக்கு இரண் டாவது திருமணம் செய்து வைக்க  பெண்ணின் பெற்றோர் நடவடிக்கை  எடுத்தனர். அப்போது அமெரிக்கா வாழ்  இந்தியரான பாஸ்கர் என்பவருடன் ஆர்த்திக்கு கடந்தாண்டு பிப்.10 ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலை யில், சனியன்று இரவு பாஸ்கர், ஆர்த்தி  மற்றும் ஆர்த்தியின் இரண்டு குழந்தை களுடன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 3 பேரை நடுரோட்டில் விட்டு விட்டு பாஸ்கர் சென்றுவிட்டதாக கூறப் படுகிறது. சேலம் மாவட்டம், முள்ளு வாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்த மான தங்கு விடுதியில் இருப்பதாக தகவ லறிந்த ஆர்த்தி ஞாயிறன்று சென்ற போது, அங்கு பாஸ்கர் மற்றும் நகர காவல்துறையினர் இருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் ஆர்த் தியை விசாரணைக்கு வரச்சொல்லி கூறியதால் என்னை எதற்கு அழைக்கி றீர்கள் எனக்கூறி காவல்துறை வாகனம்  முன்பு அமர்ந்து ஆர்த்தி தர்ணாவில் ஈடு பட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், தன்னையும் எனது  இரண்டு குழந்தையும் அடித்து துன்பு றுத்தி என்னுடன் வாழ மறுக்கிறார். மேலும் தினந்தோறும் தன்னை உடலு றவு வைப்பதற்கு தொல்லை செய்து வருகிறார். இதனால் மனவேதனை அடைந்த நான் கடந்த மாதம் தற்கொ லைக்கு முயன்றேன். அப்போது  என்னை எனது தாய் காப்பாற்றியுள் ளார். தொடர்ந்து தன்னை கொடுமைப் படுத்தி வருவதால் என்னால் வாழ முடி யவில்லை. மேலும் என் மீது தவறான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்படும்போது, தன் மீது பொய்யான புகாரை கொடுத்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைப்பது வேதனையாக உள்ளது. எனவே, தன்னைக் கொடுமைப்படுத்தி, எனது இரண்டு மகன்களையும் வெளி யேற்றிய பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதைய டுத்து அவரை காவல் துறையினர் கைது  செய்தனர்.