districts

img

வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 14 - சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா விற் பனைக்கு எதிராகப் போராடிய வாலிபர் சங்கத்தின்  சேலம்  மாவட்டச் செயலாளர் பெரியசாமி மீது கொலைவெறித் தாக்கு தல் நடத்திய குண்டர்களைக் கைது செய்ய வலியுறுத்தி திருப் பூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அனுப்பர்பாளையம் புதூர் வேலம்பாளையம் சாலை  சந்திப்பில் வெள்ளியன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் துக்கு நகரத் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மாவட்டப் பொருளாளர்  கே.பாலமுரளி, துணைச் செயலாளர் எஸ்.ராம்கிருபாகர், நகரச் செயலாளர் எஸ்.வசந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், ஜனநாயக மாதர்  சங்க நகரச் செயலாளர் ஆர்.கவிதா, சிஐடியு பனியன் சங்க  ஏரியா கமிட்டி தலைவர் எம்.பாண்டியராஜ் உள்ளிட்டோர் பேசி னர். திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரக்குழு  உறுப்பினர் சஞ்சய் நன்றி கூறினார். அதேபோல் பல்லடம் கொசவம்பாளையம் சாலை பிரிவில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் வாலிபர் சங்க ஒன்றிய  செயலாளர் சி.முருகேஷ் தலைமை வகித்தார். இதில்  மாவட்ட  துணைதலைவர் வீ.பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலா ளர் செ.மணிகண்டன், மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் பிரவீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். திரளானோர் கலந்து கொண்டனர்.