districts

img

அதிகாரிகள் வராததால் வாக்குவாதம்: கிராம சபை ஒத்திவைப்பு

நாமக்கல், ஜன.27- பள்ளிபாளையம் அருகே நடை பெற்ற கிராம சபை கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் பலர்  வராததால், கிராம சபை கூட்டத்தை ஒத்திவைப்பதாகவும், மற்றொரு நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிக ளில், கிராம சபை கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இதன்ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள  களியனூர் அக்ரஹாரம் ஊராட்சி  மன்ற அலுவலகம் முன்பு கிராம  சபை கூட்டம் துவங்கியது. இக்கூட் டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேசுகையில், காவிரி யாற்றில் தொடர்ந்து சாயக்கழிவுநீர்  கலப்பது குறித்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. சாயப்பட்ட றைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குறித்து தெரிவித்தால், அப் போதைக்கு ஒரு சில அதிகாரிகள்  வந்து பார்வையிட்டு செல்கின்ற னர். ஆனால், வழக்கம் போல சாயப் பட்டறைகள் சட்டவிரோதமாக கழிவுநீரை காவிரியாற்றில் வெளி யேற்றி வருகிறது. இதனால் பொது மக்கள் குடிநீரை பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என்றால்  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் உள்ளிட்ட முக்கியத்துறைகள் சார்ந்த அதிகாரிகள் பெரும்பாலா னோர் கூட்டத்திற்கு வராத நிலை  உள்ளது. கிராம சபை கூட்டத்திற்கு  31 துறை சார்ந்த அதிகாரிகள் வர வேண்டும் என்ற விதி உள்ள நிலை யில், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே  கிராம சபை கூட்டத்திற்கு வருகின்ற னர். இது சரியில்லாத போக்கு என  ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட  அரசுத்துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டம் நடக் கும் போதெல்லாம் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றம் செய்யப் படுகிறது. ஆனால், முறையான நட வடிக்கை எடுக்காத நிலை தொடர் கிறது. ஆவத்திபாளையம் பகுதி யில் மக்கள் பிரச்சனைகள் சார்ந்த  பல்வேறு விஷயங்கள் உள்ள நிலை யில், தொடர்ந்து அதிகாரிகள் கிராம  சபை கூட்டத்திற்கு வராமல் உள்ள னர். எனவே இந்த கிராம சபை கூட் டத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், கிராம சபை கூட்டத்திற்கு  முறையான தகவல்கள் தெரிவிக்கா ததால் பொதுமக்களின் பெரும்பா லானோர் பங்கேற்காத நிலை உள் ளது. துறை சார்ந்த அதிகாரிகள் மற் றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலை யில் சிறப்பு கிராம சபை கூட்டத்தை மற்றொரு நாளில் நடத்த வேண் டும் என பொதுமக்கள் தெரிவித்த னர். இதனையடுத்து அதிகாரிகள் வேறு வழியின்றி கிராம சபை கூட் டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்த னர். மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து முறையான தகவல் தெரி விக்கப்பட்டு அதன் பிறகு மற்றொரு நாளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.