கோவை, செப்.23- கோவை அருகே முது மக்கள் தாழி கண்டுபிடிக்கப் பட்டது. இதுகுறித்து வரு வாய்த்துறை, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூரில் பொன்னுச்சாமி என் பவர், தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில், கழிவ றைக்கு செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டிய போது பழங்கால முதுமக்கள் தாழி போன்ற மண் பானை தெரிந்துள்ளது. அதன் மீது ஒரு பலகைகள் வைத்து மூடப் பட்டிருந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் சில எலும்புகள் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னுசாமி, வரு வாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். செப்டிக் டேங்க் பயன்பாட்டுக்கு குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டு பிடிக்கப்பட்ட தகவல் சுற்றுவட்டார கிரா மங்களில் பரவியது. இதையடுத்து முது மக்கள் தாழியை பார்க்க கிராம மக்கள் திரண்டனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய் மற்றும் தொல்லியல் துறை அதி காரிகள் முதுமக்கள் தாழியை கைப்பற்றி விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து ஆய்வுக்காக முதுமக்கள் தாழியை கோவையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும் போது, ஆய்வுக்குப் பிறகே இந்த முதுமக்கள் தாழி எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது தொடர் பான விவரங்கள் தெரியவரும். அருகாமை யில் வேறு ஏதேனும் பழங்கால பொருட்கள் உள்ளதா? என ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தனர்.