திருப்பூர், ஜன.29- நம் தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள தொல் எச்சங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆய்வாளர் அமர் நாத் ராமகிருஷ்ணா கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஞாயிறன்று மாலை சிந்தனை அரங்கில், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை யின் தென் மண்டல ஆலய ஆய்வுத் திட்டக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, “கீழடி சொல்லும் தமி ழரின் தொன்மை” என்ற தலைப்பில் பேசியதாவது: தமிழ்நாட்டில் பல இடங் களில் அகழாய்வு செய்த தகவல் யாருக் கும் போய்ச் சேரவில்லை. கீழடி அக ழாய்வு செய்த தகவல் மக்களிடம் போய்ச் சேர்ந்தது. அதனால்தான் கீழடி உல கெங்கும் பேசப்படுகிறது. அகழாய்வு கள் வரலாற்றில முக்கியமானது. இலக் கியம், கல்வி, நாணயங்கள், செவி வழிச் செய்திகள் அடிப்படையில்தான் வர லாற்றை எழுதி வைத்திருக்கிறோம். புராணங்கள், கதைகள் நிறைய சொல்லி வைத்திருக்கிறோம். ஆனால் வரலாற்றை வரலாறாக சொல்லும் செயல் இங்கு நடைபெறவில்லை. இந்தியாவில் தொல்லியல் துறையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள். பல புராதன சின்னங்கள் கிடைத்தன. 1924இல் தான் 5 ஆயிரம் ஆண்டுகள் பழ மையான சிந்து சமவெளி நாகரிகம் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டு உலகுக்குத் தெரியவந்தது. இந்தியாவில் இரண் டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பி ருந்து மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள், அதுவும் தென் பகுதி யில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்துள்ளது. தொல்லியல் ஆதாரங்கள் அடிப்படையில் வர லாற்றை இதுவரை உருவாக்க வில்லை. வரலாறு ஆதாரங்கள் அடிப் படையில் எழுதப்பட வேண்டும், கட்டுக் கதைகள் அடிப்படையில் எழுதப்படு வது கிடையாது. தொல்லியலில் கிடைக் கும் தரவுகள் அனைத்தும் நம்முடைய முன்னோர்கள் தெரிந்தும், தெரியாமல் விட்டுச் சென்ற பொருட்கள்தான். இவை தான் முதன்மையான ஆதாரங்கள். அதன் அடிப்படையில் வரலாறு கட்ட மைக்கப்படும்.
இங்கு தொல்லியல் மேடுகள் நிறைய இருக்கிறது. தொல்லியல் எங் சங்கள் இருக்கும் நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளும் என்று விவசாயி கள் பயப்படத் தேவையில்லை. தொல் லியல் எச்சங்களை பாதுகாக்க வேண் டும். கீழடி முறையாக கண்டுபிடிக்கப் பட்ட இடம். தற்செயலாக கண்டுபிடிக் கப்பட்ட இடமில்லை. முறையாக அறிவி யல் ஆய்வு அடிப்படையில் கட்டமைக் கப்பட்டது. வைகை நதிக்கரையில் 293 தொல்லியல் எச்சங்களை கண்டுபிடித் தோம். அதில் ஒன்றுதான் கீழடி. நம்மிடம் சங்க இலக்கியம் இருக்கி றது. ஆனால் அந்த இலக்கியங்கள் சொல் லும் வாழ்வியல் சார்ந்த ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டவில்லை. எனவே அரை பழங்குடி நாகரிகம்தான் இங்கு இருந்தது என்று சொன்னார்கள். கள ஆய்வு, அகழாய்வு செய்து தோண்டி எடுத்த பொருட்களை ஒப்பீடு செய்தால் தான் நகர நாகரிகம் இருந்ததை சான் றாதாரத்துடன் நிறுவ முடியும். எனவே அரைப்பழங்குடி நாகரிகம்தான் இருந் தது என்ற கூற்றை மாற்றி நகர நாகரிகம் இருந்ததை உறுதி செய்தது கீழடி அக ழாய்வு. எகிப்து, மத்திய கிழக்கு பகுதி களுக்குச் சென்று வியாபாரம் செய்த தற்கான ஆதாரம், நமக்கு சாட்சியாக இருக்கிறது. கேரளாவில் பட்டணம் எனப் படும் முசிறி, காவிரி பூம்பட்டிணம், அழ கன்குளம் ஆகிய துறைமுகங்களுக்கு பொருட்களை அனுப்பும் இடமாக இருந்தது, கொடுமணல் அரிய வகை கற்களைக் கொண்டு மணிகளை செய்த தொழிற்சாலையாக கொடுமணல் இருந்திருக்கிறது. இந்தியாவிலேயே எழுத்தைக் கண் டுபிடித்துக் கொடுத்தவன் தமிழன். சங்க இலக்கியம் கி.மு 300 முதல் கிபி 300 வரை 600 ஆண்டுகாலம் என சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அதற்கு 1000 ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கும். கிமு 2172 ஆண்டுகளுக்கு அதாவது 4100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ கத்தை இரும்பை பயன்படுத்தியது தெரியவந்தது. வரலாறு என்பது தொடர்ச் சிதான். இன்றும் தொழில்நுட்பம் வளர் கிறது என்றால் அதன் தொடர்ச்சிதான். 3000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க இலக் கியம் தோன்றி இருக்கும் ஆதாரம் கிடைத் திருக்கிறது. பொருந்தல் கி.மு. 450 கால கட்ட எழுத்தைக் கண்டுபிடிக்கப்பட்டது. நம் தொல் எச்சங்களை நாம் அழித்துக் கொண்டே இருக்கிறோம். ஆதாரம் இல் லாத விசயங்களை உலகம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதாரத்தை முன் வைக்கும்போது யாருமே மறுக்க முடி யாது. தொல் எச்சங்களைக் காப்பதன் மூலம்தான் நம் வரலாற்றைக் காக்க முடியும். வரலாற்றை வரலாறாக அறிவியல் ரீதியாகத்தான் அணுக வேண்டும். வர லாற்றைக் கதையாக அணுகினால் நம் அடையாளத்தை இழந்து விடுவோம். கீழடியுடன் நின்றுவிடக் கூடாது. இன் னும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் செய்ய வேண்டும். அதன் மூலம் வரலாற்றை மீட்டெடுக்க முடியும். அறிவார்ந்த சமுதாயத்தை வளர்த்தெ டுக்க முடியும். என்றார்.