districts

img

மாநில டேபிள் டென்னிஸ் போட்டிக்கு அரையப்பட்டி பள்ளி மாணவிகள் தேர்வு

புதுக்கோட்டை, நவ.12- புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த அரை யப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நா.தேன்மொழி, க.சரண்யா. இவர்கள் புதுக்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்று பங்கேற்றனர். இதில் நா.தேன்மொழி ஒற்றையர் பிரிவிலும், நா.தேன்மொழி, சரண்யா ஆகிய இருவரும் இரட்டையர் பிரிவுகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்ற மாணவிக ளையும், அவர்களுக்கு பயிற்றி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கள் கே.சிவபாலன், எம்.பானுப்பிரியா ஆகியோரையும் பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வடிவேல்,  தலைமை ஆசிரியர் ஆர்.மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.