districts

வெளி மார்க்கெட்டில் நூல் கொள்முதல் செய்ய உத்தரவு

ஈரோடு, செப்.14- இலவச வேட்டி உற்பத்திக்காக ஆயிரம் டன் நூல் வெளி மார்க்கெட் டில் கொள்முதல் செய்ய உத்தரவிட் டுள்ள தமிழ்நுடு அரசிற்கு ஈரோட் டைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் சார்பில், பொங் கல் பண்டிகையையொட்டி ஏழைக ளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற் கான நூல் விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பின்னர் தான் உற்பத்தி தொடங்கப்படும். ஆனால், வேட்டி உற்பத்திக்கான நூல் கொள் முதல் செய்வதில் இ-டெண்டர் தள்ளி போவதால், உரிய நேரத்தில் வேட்டி  உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும், எனவே வேட்டி உற்பத்தி செய்வதற்கான நூலை  தற்காலிகமாக வெளி மார்க்கெட்டில் குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்ய  அரசு முன்வர வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 40 ஆம் எண் காட்டன் நூல் கிலோ ரூ.278க்கு விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் நேரடியாக வெளி மார்க் கெட்டில் கொள்முதல் செய்ய தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அர சின் இந்த நடவடிக்கைக்கு விசைத் தறியாளர்கள் பாராட்டு தெரிவித்துள் ளனர். இதுகுறித்து ஈரோடு பகுதியைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் கூறு கையில், தமிழ்நாடு அரசின் இல வச வேட்டி உற்பத்திக்கு, 40 ஆம் எண் காட்டன் நூல் இ-டெண்டர் மூலம் ஆயிரம் டன் கொள்முதல் செய்ய அறி விப்பு வெளியிடப்பட்டது. ஆனால், டெண்டர் தள்ளிப்போவதால் வேட்டி உற்பத்தி செய்வதற்கான நூல் கிடைக் காத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டெண்டர் இறுதி செய்யும் வரை தற் காலிகமாக வெளி மார்க்கெட்டில் 40 ஆம் எண் நூல் கொள்முதல் செய்ய  வேண்டும் என்று அரசுக்கு வலியு றுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து எங்களின் கோரிக்கையை ஏற்று இல வச வேட்டி, சேலை திட்டத்தில் வேட்டி  உற்பத்திக்கான 40 ஆம் எண் நூல்  வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கி றோம்.  அதேசமயம், பொங்கல் பண்டி கைக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள தால் நூலை வாங்கி,  உற்பத்தியை விரைவுப்படுத்துவது சிரமமானது. எனவே, இனிவரும் ஆண்டுகளில் முன்னதாகவே இதுகுறித்து திட்ட மிட்டு செயல்படுத்த வேண்டும், என்ற னர்.