திருப்பூர், ஏப்.23- 18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திருப்பூர் தமிழ் சங்கம் சார்பில் பாரதி விழா மற்றும் விருதாளர் களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்று வரும் 18 ஆவது புத்தகத் திருவிழாவில் வியாழனன்று திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழக அரசின் பாரதி விருது பெற்ற பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோ ருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சேலம் மூளை நரம்பியல் மருத்துவர் டாக்டர் பாலமுருகன் எழுதிய “ஸ்ட்ரோக் என்ற பக்கவாதம் நோயும் தீர்வும்” என்ற மருத்துவ அறிவியல் விழிப்புணர்வு நூல் வெளியிடப்பட் ்டது. இந்த விழாவில் பேசிய டாக்டர் பாலமுருகன், ஆங்கில மருத்துவத்தில் 100 ஆண்டுகள் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டு பேசினார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், மருத்துவர் பாலமுருகனின் புதிய நூல் குறித்தும், அவரது தமிழ் புலமை குறித்தும் பாராட்டிப் பேசி னார். தமிழக அரசின் பாரதி விருது பெற்ற பாரதி கிருஷ்ண குமார், ‘பாரதி ஒரு மானுடன்’ என்ற தலைப்பில் சிறப் புரையாற்றினார். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் தலைவர் ஆ.முருகநாதன் தலைமை வகித்தார். செயலா ளர் லோகநாதன் வரவேற்றார். இந்நிகழ்வில் பெருந்திர ளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்ச் சங்க பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.