districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவருக்கு பாராட்டு விழா

சேலம், மார்ச் 2- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்டத் தலைவருக்கு இயக்கப் பணிகள் பாராட்டு விழா சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து  தலைவராகவும் பொறுப்பு வகித்து ஊழியர் நலன் காத்ததோடு, 2003 ஆம் ஆண்டு வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் பி.ஜே.கண்ணன். இவர் தென்காசி மாவட்டத்திற்கு உதவி திட்ட அலுவல ராக பதவி உயர்வு பெற்று சென்றார். இந்நிலையில், சங் கத்தின் சார்பில் பிரிவு உபச்சார விழா மற்றும் இயக்கப் பணிகள் பாராட்டு விழா சிஐடியு சேலம் மாவட்டக்குழு  அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ், தலைவர் ந.திரு வேரங்கன், பொருளாளர் செல்வம், அனைத்துத்துறை ஓய்வுபெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிர மணியம், மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர்  ஜான் ஆஸ்டின், பொருளாளர் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.