கோவை, ஜன.19- கொரோனா பரவலை தடுக்க கோவை மாநகராட்சியில் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோவை ஆர்.எஸ். புரம் கலைய ரங்கில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி துவக்கி வைத்து 285 பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 2,800 பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 65 லட்சம் மதிப்பில் திரு மண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் இன்றைய தினம் 39 சாலைப் பணிகளுக்கு ரூ.24 கோடி மதிப்பில் பணிகள் தொடங் கப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடன டியாக முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 சிறப்பு அலுவலர்கள் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 100 வார்டு களில், 100 சிறப்பு அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 37 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றி யங்கள், 7 நகராட்சிகளில் சிறப்பு அலு வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவையில் சிறுவாணி குடிநீர் திட்டம் 10 ஆண்டுகால திட்டமிடு தல் திட்டம் ஆகும். தேவையான நிதி ஆதாரத்தை பெற்று சீரான குடிநீர் கிடைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிக செலவினங்கள் பொது நிதிக்கு மாற்றப்பட்டு பல்வேறு முறைகேடு கள் நடந்துள்ளது. அதுகுறித்து இறுதி விசாரணை முடிவடைந்த பிறகு சூயஸ் பணிகள் தொடர்பாக அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். 8955 புதிய மின்மாற்றிகள் கடந்த ஆட்சியின் கடைசி 9 மாதங் களில் மின்சாரத் துறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் மின் சாரத்துறை சார்பாக ரூ. 625 கோடியில் 8,905 மின்மாற்றிகள் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது. இதில் 8 ஆயிரம் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே 216 துணை மின்நிலையங் கள் அமைய அறிவிப்பு வெளியிடப்பட் டது. அதற்கு இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகள் முடிந்து விட்டது. தற்போது மேலும் 73 துணை மின் நிலையங்களுக்கு மட்டும் இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறி னார். இந்நிகழ்வின்போது திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சி.ஆர். ராமச்சந்திரன், நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனா திபதி, முன்னாள் எம்.பி. நாகராஜ், மாநில மகளிர் அணி நிர்வாகி மீனா ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.