districts

img

காட்சிப் பொருளாக மாறியுள்ள குடியிருப்பு சமூக விரோத செயல்களின் மையம்

உடுமலைபேட்டை ஜூன் 18- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே  மருள்பட்டியில், வீட்டு வசதி வாரியத்தால் சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ்  வீடுகள் கட்டப்பட்டது. தற்போது போதிய பராமரிப்பில்லாதல் சமூக விரோத செயல்க ளின் மையமாக மாறியுள்ளது. உடுமலை அருகே மருள்பட்டியில், கடந்த 1994 ஆம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத் தால் 20ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 5 கோடி ரூ  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 300  வீடுகள் கட்டப்பட்டன. ஏ, பி, சி என மூன்று  பிரிவுகளில் வீடுகளும், மேல்நிலைத் தொட்டி உட்பட கட்டமைப்பு வசதிகளும் ஏற் படுத்தப்பட்டன. களிமண் பகுதியில் பெயர ளவிற்கு கட்டப்பட்ட வீடுகளை ஏலம் விடும் போது சிக்கல் ஏற்பட்டது.   இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாதது மற்றும் தரமில்லாத கட்டுமான பணிகள்  உள்ளிட்ட காரணங்களால் வீடுகளை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் இதர தரப்பி னர் முன்வரவில்லை. இதனால் 300 வீடு களும் காட்சி பொருளாக மாறி 20 ஏக்கர் பரப் பில் அமைந்த குடியிருப்பு வளாகம் முழுவ தும் பராமரிப்பு இன்றி புதர் சூழ்ந்த நிலைக்கு  தள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 2012க்குல்  மீண்டும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை ஏலம் விட  முயற்சி மேற்கொள்ளப்பட்டது. போதிய பலன் அளிக்காத நிலையில் வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் காணமல் போக துவங்கின. தற்போது வீட்டின் சுவர்கள் மட்டுமே காணப்படுகிறது. புதர்மண்டி இடிந்து கிடக் கும் வீடுகளில் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து கழிவுகள் எடுத்து வந்து கொட்டப்பட்டும் இடமாகவும் இப்பகுதி மாறி வருகிறது.இரவு நேரங்களில் நடைபெறும் இந்த அத் துமீறல்களால் குடியிருப்பு வளாகம் குப் பைக்கிடங்காக மாறி வருகிறது.மாவட்ட நிர் வாகம் குடியிருப்பு வளாகம் குறித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருகி லுள்ள கிராம மக்கள் பலமுறை மனு அளித் தும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.