ஈரோடு, மார்ச் 3- பல்வேறு இன்னல்களுக்கு பிறகு உக்ரைனில் இருந்து தாய கம் திரும்பினேன் என அந்தி யூரைச் சேர்ந்த மருத்துவக் கல் லூரி மாணவி மௌனி சுகிதா கண் ணீருடன் தெரிவித்தார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற் கிடையே போர் மூண்டுள்ள சூழ லில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு கல்வி பயில சென்ற மாணவ, மாண வியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்ற னர். இந்நிலையில், உக்ரைன் நாட் டின் லிவிங் என்ற பகுதியில் மருத் துவம் படிக்கச் சென்ற ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப் பாளையத்தைச் சேர்ந்த மௌனி சுகிதா என்ற தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்து வர அவரது பெற்றோர் தமிழ்நாடு அர சிற்கு கோரிக்கை விடுத்தனர். இதை கருத்தில் கொண்டு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுடன் இணைய வழியில் உரையாடி தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதையடுத்து, உக்ரைன் அருகே உள்ள ஹங்கேரி நாட்டின் வழியே மாணவி மௌனி சுகிதா உள்ளிட்ட 12 பேர் பத்திரமாக தமிழ்நாடு திரும்பினர். கோவை வந்த மருத் துவ மாணவி மௌனி சுகிதா, புத னன்று நள்ளிரவு சொந்த ஊருக்கு வந்தடைந்தார். இதுகுறித்து மாணவி மௌனி சுகிதா கூறுகையில், நான் உக் ரைன் நாட்டில் உள்ள லிவிங் பகுதி யில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வருகிறேன்.
என்னுடன் சேர்த்து மொத்தம் 24 பேர் தமிழ கத்தில் இருந்து படிக்கச் சென் றோம். ரஷ்யாவுக்கும், உக்ரை னுக்கும் இடையே திடீர் போர் அறிவிக்கப்பட்டதால், அங்கி ருந்து தாயகம் திரும்ப முடியாமல் நாங்கள் பெரிதும் அவதிப்பட் டோம். இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டா லின் சொந்த ஊர் திரும்ப நடவ டிக்கை எடுத்தார். மேலும், அயல் நாடு வாழ் தமிழர் மற்றும் மறு வாழ்வு ஆணையாளர் ஜெஜிந்தா விடம், அவ்வப்போது தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி னோம். அவரும் விரைவில் தமிழ் நாடு அழைத்துச் செல்வதாகவும், எதற்கும் பயப்பட வேண்டாம் என் றும் தைரியம் கொடுத்தார். இந்நிலையில், நாங்கள் தங்கி யிருந்த இடத்திலிருந்து ஹங்கேரி ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து, ஹங்கேரி விமான நிலையத்திற்கு செல்ல பத்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந் தோம். அதன் பிறகு ஒருவழியாக 12 மாணவிகளை மட்டும் அங்கி ருந்து ஹங்கேரி விமான நிலை யத்திற்கு அனுப்பினர். அதன்பின் ஹங்கேரி விமான நிலையத்தில் இருந்து புதுதில்லி வந்தடைந் தோம். அங்கிருந்து சென்னைக் கும், இதன்பின் நேற்றிரவு கோவை வந்து, நள்ளிரவு 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். இதற்கிடையில், உக்ரைனில் இருந்தபோது வெளியே நடமாட முடியாமலும், உணவுப் பொருட் கள் வாங்கவும் மிகவும் சிரமப்பட் டேன். இதனால் ஒரு சில வேளை களில் உணவு இல்லாமல் மருத் துவ மாணவர்கள் பட்டினி கிடந் தோம். ஆனால், எப்படியோ ஒரு வழியாக சொந்த ஊருக்கு திரும்பி யதில் மகிழ்ச்சி என கூறிய அவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றி கூறினார்.