கோவை, நவ.14- நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அன்னூர் வட்டாட்சியர் அலுவல கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக கோவை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட் களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கோவை புறநகர் பகு திகளில் பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. குறிப்பாக அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக ளில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக அன்னூர் சத்தி சாலை மற்றும் பழனி கிருஷ்ணா அவன்யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந் ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக் குள்ளாகினர். மழைநீர் குடியிருப்பு பகுதி களுக்குள் வருவதற்கு நீர்நிலை வாய்க்கால் கள் ஆக்கிரமிப்பே காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கனமழை யின் காரணமாக, அன்னூர் மற்றும் அதன் சுற் றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியது. குறிப்பாக அன்னூர் சத்தி சாலையில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீரும் வீடு களுக்குள் புகுந்தது. முன்னதாக, இப்போராட்டத்திற்கு தலை மையேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அன்னூர் தாலுகா செயலாளரும், அன்னூர் பேரூராட்சி யின் 5 ஆவது வார்டு உறுப்பினரும் எஸ்.மணி கண்டன் கூறுகையில், இந்த பகுதியில் நீர் நிலை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளது, தூர் வாராப்படாமல் உள்ளதால், கன மழை பெய்தால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும் என தொடர்ந்து எச்சரித்து வந்தோம். ஆனால், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருக் கிறது. வரைபடம் இல்லை கிடைத்தவுடன் அதுகுறித்து ஆய்வு செய்கிறோம் என திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர். ஆகவே, வேறு வழியின்றி இன்று பொதுமக் கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இப்போது, வருவாய் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், பொதுப்பணித்துறையிடம், உட னடியாக சம்பந்தப்பட்ட நீர்வழித்தடங்கள் குறித்த வரைபடத்தை கேட்டுள்ளார்கள். அது வந்தவுடன் உடனடியாக நீர்வழிப்பாதை ஆக் கிரமிப்புகளை அகற்றுவதற்காக நடவடிக் கைகளை விரைவுபடுத்துகிறோம் என உறுதி யளித்துள்ளனர். இதனையேற்று தாற்காலிக மாக இந்த போராட்டத்தை ஒத்திவைத்துள் ளோம். தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார். இப்போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சுகுமா றன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.