districts

img

தேங்கிய மழை நீரில் மீன் வளர்க்கும் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு

திருப்பூர், அக். 11- திருப்பூர் குமார் நகர் முதல் சிறு பூலு வபட்டி வரை குண்டும், குழியுமான சாலையில் குளம் போல் தேங்கி இருக் கிற மழை நீரில் மீன் வளர்க்கும் போராட் டம் நடத்துவதாக இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தினர் அறிவித்துள்ள னர். திருப்பூர்-அவிநாசி சாலை குமார் நகர் சந்திப்பு முதல் சிறுபூலுவ பட்டி வரை பாதாள சாக்கடை, குடிநீர்  குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகளுக் காக  தோண்டப்பட்ட சாலைகள்  முறையாக மூடி சீரமைக்கப்பட வில்லை. இதனால் இந்த சாலை மிக  மோசமான நிலையில் போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத படி உள்ளது. ஏராளமான மருத்து வமனைகளும், தொழில் நிறுவனங்க ளும், பள்ளிகளும் செயல்படும் இந்தப்  பகுதியில் உள்ள சாலைகளை சீர் செய்ய கோரி வாலிபர் சங்கத்தின் சார் பில் ஏற்கனவே தட்டிகள் வைத்த பிறகு,  மேயர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு விரைந்து வேலையை முடிக்க சொல்லி உத்தரவிட்டார். மேயருடைய உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அதி காரிகளை கண்டித்தும் குண்டும், குழியு மான சாலைகளில் குளம் போல் மழை  நீர் தேங்கி இருப்பதாலும் போர்க்கால அடிப்படைகளில், சாலையை செப்ப னிடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் சார்பில் சாலைகளில் குளம்  போல் தேங்கி இருக்கும் மழைநீரில் மீன்  வளர்க்கும் போராட்டம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு வஉசி நகர் மாஸ்  பேக்கரி அருகில் நடைபெறும் என்று  வாலிபர் சங்க நிர்வாகிகள் கூறியுள்ள னர்.