districts

தேவாலயத்தில் அண்ணாமலை அத்துமீறல்: கண்டனம்

தருமபுரி, ஜன.9- பாப்பிரெட்டிப்பட்டி அருகே மணிப்பூரில் கிறிஸ்துவர்கள் மீது  அரங்கேற்றிய கொடூரம் குறித்து கேள்வி  எழுப்பிய இளைஞர்களை மிரட்டி, தேவாலயத்திற்குள் நுழைந்து பதற் றத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணா மலைக்கு சமூக நல்லிணக்க மேடை கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக நல்லிணக்க  மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இ.பி.பெருமாள், இணை ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன்  ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஜன.7, 8 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை பயணம் மேற் கொண்டார். அதன்படி திங்களன்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பய ணம் மேற்கொண்டபோது, அண்ணா மலை தனது பயணத்துக்கு இடையே பி.பள்ளிப்பட்டியில் உள்ள புனித தேவாலயத்திற்கு சென்று லூர்து அன்னை சிலைக்கு மாலை அணி விக்க முற்பட்டுள்ளார். அப்போது, அங்கே கூடியிருந்த இளைஞர்கள் பாஜக ஆட்சிபுரியும் மணிப்பூரில் கிறிஸ்துவ மக்களைக் கொன்றதற் கும், தேவாலயங்களை இடித்ததற் கும் பதில் சொல்லுமாறு கேள்வி  எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல், 10 ஆயிரம் பேருடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் இரு  தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் அதிகரித்த நிலையில், காவல்துறை யினரைக் கொண்டு அங்கிருந்த இளைஞர்களை அப்புறப்படுத்தி விட்டு, லூர்து அன்னை சிலைக்கு  அண்ணாமலை மாலை அணிவித் துள்ளார். நாடு முழுவதும் சிறுபான்மை  மக்களுக்கு எதிரான நடவடிக்கைக ளில் ஈடுபடுவதும், வெறுப்பு அர சியலை மேற்கொண்டு வருவதுமே ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்  பரிவார் அமைப்புகளின் வாடிக்கை யாக உள்ளது. இந்து, முஸ்லீம், கிறிஸ் தவர் உள்ளிட்ட அனைத்து மதங்க ளைச் சேர்ந்த மக்களும் சகோதரத்து வத்துடன் வாழும் தமிழ்நாட்டில், திட் டமிட்டு பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை செயல்பட்டுள் ளார். இத்தகைய நோக்கத்துட னேயே தமிழ்நாட்டில் அவர் பய ணம் மேற்கொண்டிருப்பதாகத் தோன் றுகிறது. இத்தகைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அத்து மீறலை தமிழக மக்கள் ஒற்றுமை  மேடை மற்றும் தருமபுரி சமூக நல்லி ணக்க மேடை சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.