districts

அரசியல் ஆதாயத்திற்காக எதையும் செய்யும் பாஜக!

கோவை, ஏப்.1- மக்களவை தேர்தலில் அண்ணாமலைக்கு எது வும் கைகொடுக்காத நிலையில், சிறுவாணியை அரசியல் ஆயுதமாய் பயன்படுத்த நினைத்த தின மலர் மற்றும் பாஜகவின் பொய்ச்செய்திக்கு குடிநீர் வடிகால் வாரியம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, கோவை மாவட்டம், சிறுவாணி கூட் டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக 28.03.2024 அன்று சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. சிறு வாணி அணையை நீராதாரமாகக் கொண்ட  கோவை மாநகராட்சி, குறிச்சி, குனியமுத்தூர். 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட 28 குடியிருப்புகளுக்கான கூட் டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1983 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடை யேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறுவாணி அணையிலிருந்து வருடத்திற்கு 1.300 மில்லியன் கனஅடி (நாளொன்றுக்கு 101.40 மில்லியன் லிட்டர்) குடிநீர் வழங்கப்பட வேண்டும். அணையின் நீர் இருப்பினைப் பொறுத்து கோவை மாநகராட்சி மற்றும் வழியோர குடியிருப்புகளுக்கு குடிநீர் பகிர்ந்து வழங்கப்படுகிறது.  

சிறுவாணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையே யான 29 ஆவது கூட்டுக் கூட்டம் (Joint Control Board Meeting) கடந்த 29.09.2022 அன்று கோவை யில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நடத்தப்பட்டது. அடுத்த கூட்டம். கேரள நீர்பாசன துறையால் நடத்தப்பட வேண்டும் என்பதால் அடுத்த கூட்டத்தினை நடத்துவதற்கு கேரள நீர் பாசனதுறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது. மேலும், சிறுவாணி அணையில் பராம ரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம் மூலம் 11.01.2023 மற்றும் 03.05.2023 ஆகிய தேதிகளில் முறையே ரூ.3 கோடி மற்றும் ரூ.2 கோடி  கேரள அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அணையின் பராமரிப்பு, கரைமேம்பாடு, அணைப்பகுதியில் உள்ள தீவுகளை சீரமைத்தல், நீரேற்று நிலையம் சீரமைப்பு, டணல் பராமரிப்பு ஆகிய பணிகள் தற்போது தேவையற்றது. சிறு வாணி அணையிலிருந்து நீர் அடர்ந்த வனப்பகுதி யில் வருவதால், நீரோடைகளில் எவ்வித அடைப் பும் ஏற்படுவதில்லை. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 868.75 மீட்டர் உள்ளது. அணையின் கடைசி நீர் இருப்பு நிலை அளவான 863.40 மீட்டர் வரை இரு மாநில ஒப்பந்தத்தில் குடி நீர் எடுக்க அனுமதி உள்ளது. இந்த கடைசி நீர் இருப்பு நிலையில் கூட 250,379 மில்லியன் கன அடி நீர் இருப்பு சிறுவாணி அணையில் இருக்கும். மேலும் நீர் உட்புகு கோபுரத்தின் 4 ஆவது வால்வு 861.50 மீட்டர் அளவில் அமைந்துள்ளதால் அது வரை இவ்வணையிலிருந்து குடிநீர் எடுக்க இய லும். கேரள மாநிலத்திலுள்ள. கேரள பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சிறுவாணி அணையினை ஆய்வு செய்ததில், வருடத்திற்கு 0.06 கன மில்லி மீட்டர் அளவு மட்டுமே அணையில் மண் படிவதாக தெரிவித்துள்ளனர். இம்மண் படிவு என்பது மிகவும் சொற்பமான அளவே ஆகும். அணையின் மொத்த  உயரமான 49.50 மீட்டரில், அணையின் முழு கொள் ளளவு அளவிலிருந்து 15.10 மீட்டர் அளவு வரை  மட்டுமே உள்ள நீரானது குடிநீர் தேவைக்காக இரு மாநில ஒப்பந்தத்தின்படி பயன்படுத்தப்படு கிறது. எனவே மண் படிவினால் இத்திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும் சிறு வாணி அணையில் உள்ள பழங்காலதடுப்பணை. இத்திட்டத்தின் வரையறைக்குள் இல்லை. இத்திட் டத்தில் நீர் உட்புகு கிணறு மூலம் நீர்எடுப்பு செய்யப் படுகிறது.  தற்போது சிறுவாணி அணையில் குறைந்த அளவு நீர் இருப்பிற்கு. கடந்த வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட மழைக்குறைவே காரணமா கும். தற்போதைய (28.03.2024) நிலவரப்படி சிறு வாணி அணையின் நீர்மட்டம் 868.75 மீட்டர் உள் ளது. அணையில் 143.48 மில்லியன் கனஅடி நீர் உள் ளது. தற்போது நாள்தோறும் 40.00 மில்லியன் லிட்டர் அளவு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் தற்போது உள்ள நிலவரப்படி அடுத்த பருவமழை துவங்கும் வரை 102 நாட்கள் அதா வது 08.07.2024 வரை குடிநீர் சீராக வழங்க இயலும். எனவே, சில பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட் டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. சிறு வாணி கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக செயல் பட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவ டிக்கை எடுத்து வருகிறது. மேலும் தற்போது தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள பில்லூர் III குடிநீர் அபி விருத்தி திட்டத்தின் மூலம் 30 முதல் 40 எம்.எல்.டி  வரை கூடுதலாக குடிநீர் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாநகர மக்களுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம்  போதிய அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி யில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டி யிடுகிறார். வெற்றிபெறப்போவதில்லை என்பதை  அண்ணாமலையும், பாஜகவும் நன்கு உணர்ந்துள் ளது. இருப்பினும், கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக அன்றாடம் ஏதாவது ஒரு  பொய்யை சொல்லி, ஊடகத்தின் கவனத்தை தனது பக்கமே வைத்துள்ளார். பொதுவாகவே கோடை  காலம் என்றால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது  இயல்பு என்பதை ஊரறியும். அதுவும் தற்போது  எதிர்பார்த்த அளவிற்கு பருவ மழை பொழிய வில்லை. இருந்தபோதும், இருக்கும் நீரை குடிநீர்  வடிகால் வாரியம் முறையாக பங்கீடு செய்து வரு கிறது. இதனிடையே பாஜகவும், தினமலரும் சிறு வாணி விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட  முயற்சிக்கிறது. வதந்தி பரப்புகிறது. இந்நிலை யில், புள்ளி விபரங்களோடு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் விளக்கத்தை அளித்து, அண்ணா மலையின் பேராசையில் மண் அள்ளி போட்டுள் ளது.