districts

img

அண்ணாமலையின் செட்டப்பு, அத்தனையும் பில்டப்பு...

உலகை முதலில் சுற்றி வருபவ ருக்கே ஞானப்பழம் என நாரதர் சொல்ல, சேவற்கொடியோன் முருகன் மயிலேறி வாகனத்தில் உலகை சுற்றி வருவதற்குள், அம் மையப்பன்தானே உலகம், உங் களை சுற்றினால் உலகைச்சுற்றிய தாகத்தானே அர்த்தம் என குறுக்கு வழியில் ஞானப்பழத்தை பெற்றுக் கொண்டான் ஆனை முகத்தான் என புராணக் கதை உண்டு. புராணத்தையே உண்மை என உருட்டுவது பாஜக, அண்ணாமலை அன் கோ – வின் வழக்கம். அது போன்றே வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்பதை காட்டிலும் ஊடகத் தில் தினசரி முகத்தை காட்டினால்  வாக்கு விழுந்துவிடும் என்பது கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணா மலையின் நம்பிக்கை போலும். மொத்த பாஜகவே ஊடகத்தின் வழி யாகத்தான் ஆட்சி நடத்திக்கொண்டி ருக்கிறார்கள் என்பதை உலகறியும்.  சமூக வலைத்தளம் உள்ளிட்டு மொத்த ஊடகத்தையும் வளைத்து, மிரட்டி போட்டுள்ள மோடிதான் பத்தாண்டு களில் ஒரு முறை கூட ஊடகவியலா ளர்கள் சந்திப்பை நடத்தவில்லை என்பது தனிக்கதை. கோவை ஊடகத்தினர் அண்ணா மலைக்கு பிஎம் என பட்டப்பெயர் வைத்துள்ளனர். இவர் பிரதமர் ஆகி விடுவார் என நினைத்து விடாதீர்கள். ஊடகத்தினர் பிஎம் என அண்ணா மலைக்கு பெயரிட்டிருப்பது, பிரஸ் மீட் அண்ணாமலை என்பதே. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முறையாவது ஊடகச்சந்திப்பை நடத்தி விடுகிறார். கொளுத்தி எடுக் கும் கோடை வெயிலில் அங்கும் இங் கும் ஓடி கோவை மாவட்ட ஊடகவிய லாளர்கள் ஒப்பாரி வைக்காத குறை யாக பிஎம் என பெயரிட்டு தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர். என்ன பாஸ் பன்னுறது, பிரஸ் மீட்டுல எங்க லோகே இல்லைன்னு  தெரிஞ்சவுடனே அலுவலகத்தில் இருந்து கால் வருது..யாரு ஓனருனே தெரியாம ஓடிட்டு இருக்கிறோம் என்கின்றனர் சக ஊடகவியலாளர் கள். இது இப்படியிருக்க…பிரச்சாரத் திற்கு சென்ற இடங்களில் எந்த வர வேற்பும் இல்லை. பிரச்சார வாகனத் தின் பின்னால் வந்தவர்களே ஆங் காங்கே நின்று வரவேற்பு கொடுத்து கூட்டம் இருப்பதாக காட்டிக்கொண் டனர். ஒரு புறம் சொந்த கட்சியினரே சூனியம் வைக்க, மறுபுறம் மக்கள் ஆதரவும் இல்லாததே அண்ணா மலை போட்டியிடும் களத்தில் பாஜக வின் நிலை. இதனையடுத்து, களத் திலோ ஒன்றுமில்லை என உறுதியாக தெரிந்த பின்னர், பாஜகவினர் செட் டப் செல்லப்பா வேலையை செய்து  வருகின்றனர். முகத்தில் தாமரை வரைவது, குழந்தையை தூக்கி  கொஞ்சுவது, ஆடுவது, அரட்டைய டிப்பது என வெறும் பில்டப்பில் அண் ணாமலையின் பிரச்சார வாகனம் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத் தின் பிரதான கட்சிகளான திமுக, அதி முகவினரே பூத் கமிட்டிக்கு ஆட் களை போட திணறிக்கொண்டிருக் கிற நிலையில், பாஜக அத்தனை பூத்துகளுக்கும் ஆள் இருப்பதாக நீண்ட பட்டியலை தேர்தல் அலுவ லகத்தில் கொடுத்திருந்தது. ஆனால், அது அத்தணையும் ஹம்பக் என்பது இப்போது தெரியவந்துள்ளது. அதிமுக வேட்பாளரை அறிமுகப் படுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சமீபத்தில் பேசுகையில், பாஜகவுக்கு பூத் கமிட்டிக்கே ஆளில்லை, அதிகபட்சம் ஐந்து சத விகிதம் வாக்கு வாங்கினால் அது பெரிய விசயம் என சாடியிருந்தார். நிஜத்திலும் அதுவே உண்மை. பாஜகவில் மண்டல், ஷஹாரி கேந் திரா, சக்தி கேந்திரா என பல அடுக்கு களிலே நிர்வாகிகள் நியமிக்கப்படு கின்றனர். இதில் தேர்தல் சார்ந்து இயங்கும் பாஜகவின் நிர்வாக கட்ட மைப்பு சக்தி கேந்திரா. இதில் ஆறு பூத் கமிட்டிகள் இடம்பெறுகின்றன. அவர்கள் பூத் கமிட்டி பணிகளில் ஈடு படுவதாக சொல்லப்படுகிறது.  

இந்நிலையில், சக்தி கேந்திரா வில் இயங்கும் பூத் கமிட்டிகளுக்கு, அண்ணாமலை தரப்பினர் முதற்கட்ட மாக தேர்தல் செலவுக்கான பணப் பட்டு வாடா செய்துள்ளனர். சக்தி கேந்திரா நிர்வாகிகளை அழைத்து, பூத் கமிட்டி உறுப்பினர்களை வரி சைப்படுத்தி அழைத்தபோது, தேர் தல் அலுவலகத்தில் அளித்திருந்த பட்டியலில் இடம் பெற்ற பலரையும் காணவில்லை. ஒவ்வொரு பட்டிய லாக வாசிக்க வாசிக்க, பெயர்கள் இருந்ததே தவிர, பெயரில் உள்ள ஆட்களை காணவில்லை. 80 சத விகிதத்திற்கு அதிகமானோர் போலி யான பெயர்கள் என்பது தெரியவந் தது. அதிர்ச்சியடைந்த அண்ணா மலை அன் கோ பூத் கமிட்டிக்கு நகரப்பகுதிகளிலேயே ஆட்கள் இல்லை, இனி கிராமப்புற பகுதிக ளில் நமக்கு சுவடு கூட இருக்காது, இனி தேர்தல் நாளன்று வெளியே வாக்கு சேகரிக்க ஆட்கள் வேண் டும், தெருவுக்குள் கேன்வாஷ் செய்ய  ஆள் வேண்டும், வெளியூர்காரர் களை வைத்து சமாளிக்க முடியாது. வாக்கு பதிவு நாளுக்கு முந்தைய நாளன்றே அனைவரையும் வெளி யேற்றி விடுவார்கள்  என அங்கேயே அண்ணாமலையிடம் வெளியூரில் இருந்து வந்த நிர்வாகிகள் புலம்பி யுள்ளனர்.   இப்பவே கண்ணக்கட்டுதே இன் னும் பதினைந்து நாட்கள் உள்ளதே  எப்படி சமாளிப்பது என்பதே இப் போதைக்கு அண்ணாமலையின் (மன்னிக்கவும்) பிஎம்-ன் கவலை யாக உள்ளது. (ந.நி)