districts

img

செவிலியர் தினம்: மெழுகுவர்த்தி ஒளியில் ஜொலித்த தேவதைகள்

கோவை, மே 12- செவிலியர் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்து வமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழியேற்றனர். ‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளே உலகம் முழுக்க செவிலியர் தினமாக கொண் டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி யன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக மருத்துவமனைகளில் செவிலியர் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அதன்படி கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள செவிலியர் பள்ளி யில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் செவிலியர் பள்ளி மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து செவிலியர் தினம் உறுதி மொழி ஏற்று கொண்டாடப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நைட்டிங்கேல்  அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.