உதகை. பிப்.20- பிற துறைகளில் உள்ள பணி களை எங்களுக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் உதகையில், உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண் டருக்கு உண்டான முழு தொகையை வழங்க வேண்டும். பிற துறை வேலை களை அங்கன்வாடி ஊழியர்களுக்கு திணிப்பதை கைவிட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் பழுத டைந்த அலைபேசிக்கு பதிலாக புதிய அலைபேசி வழங்க வேண்டும். பத்து ஆண்டுகள் பணி முடிந்த ஊழியர் களுக்கு, மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லையெனில், கிரேட் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், திங்களன்று உதகை யில் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடலில் நடந்த போராட்டத்துக்கு அங் கன்வாடி தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலை வர் சித்ரா போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். நீலகிரி மாவட்ட அங்கன்வாடி செயலாளர் சசிகலா விளக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் சங்கர லிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஆதிரா வாழ்த்தி பேசினர். மாநி லத் தலைவர் தினமாலா சிறப்புரை யாற்றினார். அங்கன்வாடி மாவட்ட பொருளாளர் சந்திரலேகா நன்றி கூறினார். உண்ணாவிரத போராட்டத் தில் 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.