districts

img

அங்கன்வாடி மையத்தை மது பாராக மாற்றிய அவலம்

திருப்பூர், அக்.10- அன்னையம்பாளையம் அங்கன் வாடி மையத்தில் குடிகாரர்கள் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு பாட்டி லையும் அங்கேயே போட்டுவிட்டு, வாந்தி எடுத்து அந்த இடத்தை அசிங் கம் செய்து வைத்துள்ளனர். இவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ள னர். திருப்பூர் மாநகராட்சி, 1 ஆவது  வார்டுக்கு உட்பட்ட அன்னையம் பாளையம் அங்கன்வாடி மையத்தில் இரவு நேரங்களில் சில சமூக விரோதி கள் அங்கன்வாடி திண்ணையில் அமர்ந்து மது அருந்துவதும், புகை பிடிப்பதும், மதுபாட்டில்களை உடைத் தும், உணவு அருந்திவிட்டு சண்டை யிடுவதும், போதையில் வாந்தி எடுப் பதும் என அசிங்கப்படுத்தி வருகின்ற னர். அங்கன்வாடி மையத்தை மது பானக் கடையில் நடத்தும் பார் போல  மாற்றி இருக்கிறார்கள். அந்த அங் கன்வாடி மையத்தில் செவ்வாயன்று இரவு சில சமூகவிரோதிகள் மது குடித்துவிட்டு, பாட்டில்களை அங் கேயே போட்டுவிட்டு, வாந்தி எடுத்து  வைத்திருக்கின்றனர். மழலைகள் தங்கள் கல்வியைத் தொடங்கும் உன் னதமான இடமாகத் திகழும் அங்கன் வாடி மையத்தைக் கூட விட்டு வைக் காமல் அதை மதுபான பாராக மாற்றி  அசிங்கம் செய்துவரும் கயவர்கள்,  சமூக விரோதிகள் மீது காவல் துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தியாகி குமரன்  காலனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கிளை வலியுறுத்தி உள்ளது. மேலும், குமரன் காலனி பகுதி யில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை மற்றும் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்தும் கூடாரங்க ளாக மாறியுள்ளது. சமூக சீர்கேடு  தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வேலம்பாளையம் காவல் நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கட் சியினர் புகார் கொடுத்துள்ளனர். அங் கன்வாடி மைய ஊழியரும் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கி றார். காவல் துறையினர் அங்கு வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இது போன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், பெற்றோர்கள் தங் கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள் விக்குறியாகும் என்ற அச்சத்தில் அங் கன்வாடி மையத்திற்கு அனுப்புவது பாதிக்கப்படும். எனவே இவ்விசயத் தில் காவல் துறை உறுதியான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளது.