பழங்கால நாணயங்கள் கண்காட்சி
தருமபுரி, ஜூலை 23- தருமபுரி அருகே பழங் கால நாணயங்கள் கண் காட்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொல்லியல் மன்றம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை வகித்தார். சமூக வியல் ஆசிரியை மஞ்சுளா, தொல்லியல் மன்றத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். இந்த விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உமாசங்கரி, செந்தில், நீலாம்பிகை ஆகி யோர் பேசினர். ஆங்கில ஆசி ரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் டிஆர்யுசிசி கூட்டம்
சேலம், ஜூலை 23- தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் 25ஆவது டிஆர்யுசிசி கூட்டம் சேலம் ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் 25ஆவது டிஆர்யுசிசி கூட்டத்தில் கோயம் புத்தூர் சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, போத்தனூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ரயில் நிலைய மறுசீர மைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப் பட்டது. கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, மேட்டுப்பாளையம் மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு மற்றும் உள்கட்ட மைப்பை மேம்படுத்துமாறு வலியுறுத் தப்பட்டன. இக்கூட்டத்தில் திட்டம், முன்மொழிவுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சிவ லிங்கம் மற்றும் சீனியர் கோட்ட வணிக மேலா ளர் பூபதி ராஜா ஆகியோர் பதில் அளித் தனர். இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.சண்முகம்,என்.சுப்ரமணியன், வி.சுந்தரம், பி.அருண் குமார், யு.கே.சிவஞானம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய அளவிலான கயிறு இழுத்தல் போட்டி: கேரளா அணிகள் அசத்தல்
நாமக்கல், ஜூலை 23- திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கயிறு இழுத்தல் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட கேரளா அனைத்திலும் வெற்றி பெற்று அசத்தியுள் ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, தேசிய மற்றும் நாமக்கல் கயிறு இழுப்போர் சங்கம் இணைந்து, 36 ஆவது தேசிய அளவிலான பெண்கள் சீனியர் ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் 25 ஆவது சப் ஜூனியர் சாம்பியன் ஷிப் கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றன. திருச்செங் கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகா ராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர், பாண்டிச்சேரி, சத்தீஸ்கர், தெலுங் கானா, அசாம், அருணாச்சல பிரதேசம், தில்லி என 11 மாநிலங் களைச் சேர்ந்த 374 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அணிக்கு தலா எட்டு பேர் கலந்து கொள்ளும் இப்போட்டியில், 2 பேர் மாற்று வீரர்களாக களமிறக்கப்பட்டனர். 13 வயதுக்கு கீழ் உள்ளோர் பிரிவில் விளையாடும் எட்டு பேரும் சேர்ந்து 340 கிலோ எடை, 15 வயதுக்கும் கீழ் உள்ளோர் பிரிவில் 360 கிலோ, 17 வயதுக்கும் கீழ் உள்ளோர் பிரிவில் 420 கிலோ, 19 வய திற்கும் கீழ் உள்ள ஒரு பிரிவில் 460 கிலோ, 19 கிலோவுக்கும் மேல் உள்ளூர் பிரிவில் 500 கிலோ எடை உள்ளிட்ட பிரிவு களில் போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிக மதிப் பெண் பெற்ற அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்று, அரை இறுதிப் போட்டிகள், இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. 13, 15, 17 மற்றும் 19 என அனைத்து பிரிவுகளிலும் கேரளா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. 13 வயதிற்கு கீழ் உள்ளோர் பிரிவில் தில்லி அணி, 15 வயதிற்கு கீழ் உள் ளோர் பிரிவில் மஹாராஷ்டிரா, 17 வயதிற்கு கீழ் உள்ளோர் பிரிவில் தில்லி, 19 வயதிற்கு கீழ் உள்ளோர் பிரிவில் தமிழ்நாடு, 19 வயதிற்கு மேல் உள்ளோர் பிரிவில் ஹரியான பவர் ஆகிய அணிகளுடன் கேரளா அணிகள் இறுதிக்களம் கண்டன. அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசை கேரளா அணியே தட்டிச்சென்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக ளுக்கு சான்றிதழ்கள், வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட் டன. இந்நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
வரி செலுத்தாத 61 வாகனங்கள் பறிமுதல்
உதகை, ஜூலை 23- நீலகிரி மாவட்டத்தில் வரி செலுத்தாமல் இயக்கிய 61 வாக னங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். நீலகிரி மாவட்டம், உதகையில் வட்டார போக்குவரத்து அலுவலகமும், கூடலூரில் கூடுதல் அலுவலகமும் செயல் பட்டு வருகிறது. இங்கு மாதந்தோறும் சராசரியாக 400 இருசக் கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத்துக்கான வரி செலுத்தா மலும், தகுதிச்சான்று பெறாமலும் வாகனங்கள் இயக்கப் பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சொந்த வாக னங்களை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்தது. இதைய டுத்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவின்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் மோட் டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா, முத்துசாமி ஆகியோர் உதகை சுற்றுவட்டார பகுதியிலும், மோட்டார் வாகன ஆய்வா ளர் குமார் கூடலூரிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட இலகு ரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத் திய நிலையில் விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 11 வாகனங் கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
நாமக்கல், ஜூலை 23- கொல்லிமலையில் பிரசித்திபெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற் றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச் சிக்கு சென்று குளித்து மகிழ்ச்சி அடைவர். இந் நிலையில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதி யில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணி கள் நடந்து வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சி பகு திக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம டைந்து திரும்பி செல்கின்றனர்.
விதைக்கு மானியம்
நாமக்கல், ஜூலை 23- பரமத்திவேலூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநி யோகம் செய்யப்படவுள்ளது. 50 சதவிகிதம் மானிய விலை யில் சோளம் -கோ-32, நிலக் கடலை – கதிரிலெப்பாக்ஸி - 1812, பிஎஸ்ஆர்-2, உளுந்து வம்பன்-8, வம்பன்-9, வம் பன்-10 ஆகிய சான்று விதை கள் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட் டங்களில் வழங்கப்பட்டு வரு கிறது. விதைகள் தேவைப் படும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, ஆதார் அட்டை விவரங்களுடன் பர மத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையலாம்.
மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகை, ஜூலை 23- நீலகிரியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு, சாலை களில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்த கிரி, குந்தா, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்று டன் லேசான மழை பெய்து வருகிறது. மேலும். மண்ணில் ஈரத் தன்மை அதிகரித்து ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. அதன்படி வெள்ளியன்று மட்டும் 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில், சனியன்று 3 இடங் களில் மரங்கள் முறிந்து விழுந்தன. உதகையிலிருந்து குருத் துக்குளி செல்லும் சாலையில் தீட்டுக்கல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், உதகையிலிருந்து கூடலூர் செல் லும் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட் டது. இதுதவிர அய்யன்கொல்லியில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாலைகளில் வாகனங் கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையறிந்த தீய ணைப்பு வீரர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்று, மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரா னது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார் - புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றோர பகுதிக ளுக்கு குளிக்கவும், துணி துவைக்கவும் மக்கள் செல்லக்கூ டாது. சிறுவர்களை ஆற்றோரத்துக்கு பெற்றோர் அனுப்பக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா கூறுகையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் பாது காப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாண்டியார் - புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதி கரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் யாரும் செல்லக்கூடாது. அவசர காலத்தில் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும், என்றார்.
விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரணம்: அமைச்சர் வழங்கல்
கோவை, ஜூலை 23- பூலுவபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணி யாற்றி வந்தவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவ ரது குடும்பத்திற்கு அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நிவா ரண உதவிகளை வழங்கினார். கோவை மாவட்டம், பூலுவபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் தேவி. இவரது கணவர் ராஜேந்திரன். இத்தம்பதியினர் கடந்த ஜன.4 ஆம் தேதி யன்று சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர் களின் மகன் ஆர்.தரணீஷ் மற்றும் மகள் ஆர்.வாசுலேகா ஆகி யோரிடம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியம் சார் பில் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் வைப்புத்தொகைக்கான காசோலைகளை ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங் கினார். முன்னதாக, கோவை சுற்றுலா மாளிகையில் அமைச் சர் என்.கயல்விழி செல்வராஜ், வன்கொடுமையால் பாதிக் கப்பட்டு இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 3 நபர்க ளுக்கு மாதம் தலா ரூ.7 ஆயிரம் (ரூ.5000 மாத ஓய்வூதியம் மற் றும் ரூ.2000 அகவிலைப்படி) உதவித்தொகை பெறுவதற் கான ஆணைகள், 2 நபர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமையலர் பணியி டத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில், தாட்கோ மேலாண் இயக்குநர் கே.எஸ். கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தூய்மை பணியாளர் நலவாரிய மாநிலத் துணைத்தலைவர் கனிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) சுரேஷ், ஆலந் துறை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி, பூலு வப்பட்டி பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.