districts

img

தனியார் பேருந்துகளின் தொடரும் அராஜகம் தெக்கலூரில் பேருந்துகள் சிறைப் பிடிப்பு

அவிநாசி, மார்ச் 29 - திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்து கள் தெக்கலூர் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல முடியாது என அராஜகமாக செயல்படுகின்றனர். இந்நி லையில் செவ்வாயன்று தெக்கலூரில் பயணிகளை ஏற்ற மறுத்த காரணத்திற்காக இரு தனியார் பேருந்துகளை பொது  மக்கள் சிறைப் பிடித்தனர். திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பேருந்துகள் அவி நாசி, தெக்கலூர் ஆகிய வழித்தட ஊர்களில் பயணிகளை ஏற்றி  இறக்கிச் செல்லாமல் நேரடியாக புறவழிச் சாலையில் இயக் கப்பட்டு வந்தன. அண்மையில் தனியார் பேருந்தில் ஏறி தெக்க லூருக்கு செல்ல டிக்கெட் கேட்ட பெண் வழியிலேயே அவச ரமாக இறக்கிவிடப்பட்டு, அவர் அதே பேருந்தின் சக்கரத்தில்  சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில்  கடும் கோபாவேசத்தை ஏற்படுத்தி போராட்டங்களும் நடத்தப் பட்டன. இதையடுத்து திருப்பூர் - கோவை பேருந்துகள் அனைத்தும் அவிநாசி, தெக்கலூர் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்திச் செல்ல உத்தரவிடப்பட்டது. இதற்குப் பிறகும் தனி யார் பேருந்துகள் தெக்கலூருக்குள் போகாமல் நேரடி யாக இயக்கப்படுகிறது. இந்நிலையில், செவ்வாயன்று தெக்கலூர் வெள்ளாண்டி பாளையம் கிழக்காலத் தோட்டத்தைச் சேர்ந்த வேலுமணி  என்பவர், திருப்பூர் அருகே உளள எஸ்ஏபி பேருந்து நிறுத் தத்தில், தெக்கலூர் வழியாக கோவை செல்லும் தனியார்  பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது, நடத்துநர், தெக்க லூர் போகாது எனக்கூறி அவரிடம் வாக்குவாதம் செய்து, தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அதே பேருந்து மீண்டும் திருப்பூர் திரும்பு கையில் தெக்கலூருக்கு வந்தது. அங்கு நூற்றுக்கணக்கான  பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைப் பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பொதுமக்கள் போராட்டம்  தொடர்ந்ததால் பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில்  புறப்பட்டுச் சென்றனர். தனியார் பேருந்துக்கு ஆதரவாக பரிந்து பேசவந்த மற்றொரு தனியார் பேருந்தின் ஓட்டுநர், நடத் துநரைக் கண்டித்து, அந்த பேருந்தையும் மக்கள் சிறை  பிடித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருப் பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துநர் மீது  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்  தனியார் பேருந்து நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். காலை 6 மணி முதல் மாலை 10 மணி வரை காவலர் கள் தெக்கலூர் பகுதியில் பேருந்துகள் நிறுத்தி செல்வதை உறுதி செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என  உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டனர். சிறைபிடிக்கப்பட்ட பேருந்து அவிநாசி  காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.