சேலம், டிச.12- தனக்கு ஜீவனாம்சமாக கொடுக் கப்பட்ட சொத்தை தன்னைப் பார்த் துக் கொள்வதாக கூறி பேரன் ஏமாற்றி பெற்றுக் கொண்டதால் அதனை ரத்து செய்ய கோரி ஆம்புலன்சில் வந்து மனு கொடுக்க வந்த மூதாட்டியால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டிணம் அடுத்த மேட்டுப்பட்டி தாத னூர் பகுதியைச் சேர்ந்தவர் 87 வய தான மூதாட்டி பாக்கியம். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவரு டைய கணவர் மற்றும் இரண்டு மகன் கள் ஒரு பெண்கள் உயிரிழந்த நிலை யில் ஜெயலட்சுமி என்ற ஒரு மகள் மட்டுமே உயிருடன் உள்ளார். இந்நி லையில், உயிரிழந்த மூத்த மகன் ரத்தினவேலின் மகன் மற்றும் மரு மகள் சேர்ந்து தன்னை பார்த்துக் கொள்வதாகக்கூறி ஜீவனாம்சமாக எழுதி வைக்கப்பட்ட நிலத்தை தான செட்டில்மெண்டாக எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூதாட்டி வீட்டில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள் ளது. ஆனால், கால் முறிவு ஏற்பட்டும் மூத்த மகனின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மூதாட்டியை கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டதாக கூறப் படுகிறது. இதனிடையே பாக்கியத் தின் மகள் ஜெயலட்சுமி மற்றும் இன் னொரு மகன்களின் பேரன்கள் அவ் வப்போது உணவு மற்றும் மூதாட் டியை பராமரித்து வந்துள்ளனர். இந் நிலையில் தன்னை பராமரித்துக் கொள்வதாக கணவர் ஜீவனாம்ச மாக தன்னுடைய பெயரில் எழுதி வைத்த சொத்தை மூத்த மகனின் பேரன் மற்றும் மருமகள் தான செட் டில்மெண்டாக எழுதி பெற்றுக் கொண்டதை ரத்து செய்யக்கோரி, தபால் மூலம் மாவட்ட ஆட்சியர் மற் றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு மனுவாக மூதாட்டி அளித்துள்ளார். ஆனால், இதில் எவ்வித நடவ டிக்கையும் இல்லாததால், கால் முறிவு ஏற்பட்ட நிலையில், ஆம்பு லன்ஸ் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் தபால் மூல மாக எழுதிய கடிதத்தின் மீது நடவ டிக்கை எடுக்க நினைவூட்டும் வித மாக மனு அளிக்க வந்தார். தன்னை பராமரித்துக் கொள்வதாக கூறி பேரன் மற்றும் மருமகள் தான செட் டில்மெண்டாக எழுதி பெற்றுக் கொண்டதை ரத்து செய்யக்கோரி மனு அளித்தார். ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு மனு கொடுக்க வந்த சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியது.