districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

உதகை, ஜூலை 31- நீலகிரி மாவட்டம், முது மலை புலிகள் காப்பகத்துக் குட்பட்டது சிங்காரா சரகம். அங்குள்ள நார்தன் ஹே எஸ் டேட் பகுதியில் ரபீக் சேட் என் பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் குருஜன் (57)  என்பவர் வேலை செய்து வரு கிறார். இந்நிலையில், மதிய உணவிற்காக வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக காட்டெருமை தாக்கியது. இதில், அவருக்கு தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்த வன பணியாளர்கள், படுகாயம டைந்த குருஜனை மேல் சிகிச் சைக்காக உதகை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்திடுக

பொதுமக்கள் போராட்டம் தருமபுரி. ஜூலை 31- போடோரியம்மன் ஆற்றின் குறுக்கே  பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி  தொப்பூர் அருகே பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கம்மம்பட்டி, காட்டு வளவு, விநாயகபுரம் உள்ளிட்ட ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதி விவசாயிகள் போடோரியம்மன் ஆற்றை கடந்து தருமபுரி மாவட்ட எல்லை  பகுதியிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு தாங்கள் விளைவிக்கும் விவசாய பொருட் களை விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். தினமும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு  மாண வர்கள் சென்று வருகின்றனர். இதற்கி டையே மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அதிகப்படியான மழைநீர் செல்வதால்  இந்த ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை  ஏற்படுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே  பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக் கள் பல ஆண்டுகளாக  கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியின்று பொதுமக்களே ஒன்றி ணைந்து பொடேரியம்மன் ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் மற்றும் மண் சாலை அமைத்து  பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது தொப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றி யுள்ள கால்வாய்கள் மற்றும் போடோரியம் மன் ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அமைத்துக் கொண்ட மண் சாலை மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. தற் போது ஆற்றை கடக்க முடியாமல் அவதிப் பட்டு வருகின்றனர். ஆற்றின் குறுக்கே  பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை  போக்சோவில் இருவர் கைது

திருப்பூர் ஜூலை 31- கனியான்பூண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் கனியான்பூண்டி பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள தனியார் பனி யன் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த விஷ்ணுராம் (24) என்பவர் காதலித்து திருமணம் செய்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் வாலிபரி டமிருந்து சிறுமியை மீட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி யின் சித்தப்பா பிரகாஷ் (31) என்பவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு  காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசா ரணை மேற்கொண்ட காவல்துறையினர் விஷ்ணுராம் மற் றும் சித்தப்பா பிரகாஷ் ஆகிய 2 பேரையும் போக்சோ  சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அணை நிலவரம் 

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்: 28.77/60அடி  நீர்வரத்து: 38 கன அடி வெளியேற்றம்: 27 கன அடி மழையளவு:4 மி.மீ அமராவதி அணை  நீர்மட்டம்: 88.36/90 அடி நீர்வரத்து: 2,449 கனஅடி வெளியேற்றம்: 2,720 கன அடி


மின் கட்டண உயர்வை கைவிட கோரி ஆக. 8-ல் விசைத்தறி வேலைநிறுத்தம்

திருப்பூர், ஜூலை 31- தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைக் கைவிட கோரி ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவதென திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தின் செயற்குழு மற்றும் கூட்டமைப்பு கூட்டம், பல்லடத்தில் நடந்தது. பல்லடம் சங்க தலைவர் இரா. வேலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் அப்புக்குட்டி (எ) மு.பாலசுப்பிரமணி யம், பொருளாளர் முத்துக்குமாரசாமி மற்றும் தலைமைச் சங்க நிர்வாகிகளோடு கண்ணம்பாளையம் தலைவர் செல்வ குமார், செயலாளர் செந்தில்குமார், மங்கலம் துணைத் தலை வர் கோபால், செயலாளர் பழனிசாமி, 63 வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்று ஆலோசனை யில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழக அரசு அறி வித்துள்ள மின்கட்டண உயர்வை, அரசே மானியமாக வழங் கிடக்கோரி மின்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களை சந்தித்தும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் ஆத ரவுடன் தமிழக முதல்வரிடம் விரைவில் மனு அளிப்போம். ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து குடும்பத்தோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மின்கட்டண உயர்வை, அரசே மானிய மாக வழங்கிடக் கோரி மனு அளிப்போம். மேலும் வரும் 8  ஆம் தேதி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்  அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் மின்கட்டண  உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, மானியமாக அளித்திட மனு அளிப்பதெனவும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என தெரி வித்தனர்.

சுருக்கு கம்பி வேலி அமைத்தவர் கைது

உதகை, ஜூலை 31- வனவிலங்குகள் தாக்குதலிலிருந்து பயிர்களை காப்பாற்ற தோட்டத்தில் சுருக்கு கம்பி வேலி அமைத்த வரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகையை சுற்றிலும் அடர்ந்த வனப் பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிக மான வனப்பகுதியை கொண்டு இருப்பதால், புலி, சிறுத்தை,  காட்டெருமை, கடமான் உட்பட பல்வேறு வனவிலங்குகள் இப்பகுதியில் உள்ளன. குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள  விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர் களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு கம்பி வேலிகளை விவசாயிகள் அமைத்து வருகின்ற னர். மேலும், வேட்டையாடுவதற்காகவும் சுருக்குகம்பி பயன் படுத்தப்படுகிறது.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மந் தாடா பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் சுருக்கு கம் பியில் சிறுத்தை சிக்கி பலியானது. இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற் கிடையே உதகை வடக்கு வனச்சரகத்திற்குட்பட்ட, தேனாடு கம்பை பிரிவில் மந்தாடா, பேரின்பவிலாஸ் பகுதியில் விவ சாய தோட்டத்து வேலி ஓரத்தில் சுருக்கு கம்பிகள் மற்றும் பூச்சி கொல்லி மருந்து தடவிய வாழைப்பழங்கள் வைத்து  இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டனர்.  இதையடுத்து, தோட்டத்து உரிமையாளர் சுந்தரம் என்ப வரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து வனத்துறையினர் கைது செய்தனர். இதன்பின் அவர் நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டார். இதற்கிடையே தோட்டத்தில் யாராவது சுருக்கு  கம்பி அமைத்திருந்தால் உடனடியாக அதை அகற்ற வேண் டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்துணவு திட்டத்தில் பால் பொருட்கள் வழங்க வலியுறுத்தல் 

ஈரோடு, ஜூலை 31- அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு திட்டத் தில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பால்பொருட்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 6 ஆவது மாநாடு கோபிசெட்டிபாளையம் ஜோதிபாசு நினைவகத்தில் மாவட்ட தலைவர் பி.வெங்கிடுசாமி தலைமை யில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மரப்பம்பாளையம் சொசைட்டி துணைத்தலைவர் பி.வி.செல்வராஜ் ஏற்றி வைத் தார். மாவட்ட துணைச்செயலாளர் சி.பெரியசாமி வரவேற்பு ரையாற்றினார். மாநிலப் பொருளாளர் எம்.சங்கர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.முத்துசாமி, சக்தி ஆலை  கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வி.பி.கார்த்திகேயன் உட் பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், எருமை பால் லிட்டருக்கு ரூ.51ம், பசும்பா லுக்கு ரூ. 42ம் விலை அறிவிக்க வேண்டும். தரமான கால்நடை தீவனம் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவினில் நடைபெறும் ஊழல்களை தடுத்து, நிர்வாக சீர்திருத் தம் செய்ய வேண்டும். விற்பனை விலையால் ஒன்றியங்க ளுக்கு ஏற்படும் இழப்பிற்கு ரூ.270 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும். பால் பொருட்களுக்கு 5 விழுக்காடும், பால் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களுக்கு 18 விழுக்காடாக உயர்த்திய ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வேண்டும். சத்து ணவு திட்டத்தில் பால் மற்றும் பால் பொருட்களை குழந்தை களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவ ராக பி.வி.செல்வராஜ், செயலாளராக சி.பெரியசாமி, பொரு ளாளராக ஏ.கே.செல்லிகவுண்டர், துணைச்செயலாளராக கே.ரத்தினம், துணைத்தலைவராக எம்.அருள்  உள்ளிட்ட 12 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடி வில், மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி நிறைவுரையாற்றி னார்.

இயந்திரங்கள் இருந்தும் ஓட்டுநர்கள் இல்லை: வேளாண்மை பொறியியல் துறையின் பரிதாபம்

திருப்பூர், ஜூலை 31- திருப்பூர் மாவட்ட வேளாண்மை பொறியி யல் துறையில் வேளாண்மை இயந்திரங்கள் இருந்தும் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் புகார்  கூறியுள்ளனர். மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் முன் னாள் தலைவர் சி.பொன்னுசாமி சனியன்று மாவட்ட விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் கூறுகையில், திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை உள்ளடக்கி திருப்பூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை செயல்படுகிறது. இங்கு விவசாயிகளுக்குத் தேவையான டிராக்டர்கள், ஜேசிபி மற்றும்  செயின் டோசேர் உள்ளிட்ட தேவையான இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.  திருப்பூர் மாவட்ட உதவி செயற்பொறி யாளர் அலுவலகத்தில் 3 டிராக்டர், 2 ஜேசிபி, 2 செயின் டோசேர் உள்ளன. இவைகள் விவ சாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. பருவ காலங்களில் திருப்பூர், அவிநாசி, பல்ல டம், ஊத்துக்குளி, பொங்கலூர் ஆகிய வட் டாரங்களுக்கு டிராக்டர் வசதி போதுமான தாக இல்லை. எனவே வட்டாரத்திற்கு ஒன்று  என்ற இலக்கில் மேலும் 2 டிராக்டர்கள் இந்த அலுவலகத்திற்குத் தேவைப்படுகிறது. மேலும் இதை இயக்குவதற்குத் தேவையான ஓட்டுநர்கள் இல்லாமல் பற்றாக்குறையாக இருப்பதால் விவசாயிகளுக்குத் தேவை யான நேரத்தில் டிராக்டர் கிடைக்காமல் அவ திப்படுகிறார்கள். எனவே உரிய டிராக்டர்கள், ஓட்டுநர்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். திருப்பூர் மாவட்ட வேளாண் பொறியி யல் துறைக்கு ஒரு நீரூற்று நிபுணர் உள்ளார். ஆழ்குழாய் கிணறு அமைக்க விரும்பும் விவ சாயிகள் இடத்திற்கு சென்று வர நீரூற்று நிபு ணருக்கு அரசே வாகன ஏற்பாடு செய்து தர வேண்டும்.

விவசாயிகள் தனியார் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைக்க அதிக செலவு ஏற்படுகி றது. எனவே வேளாண்மை பொறியியல் துறை மூலம் சுமார் 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைக்க ரிக் வசதி ஏற்படுத்தி குறைந்த வாடகையில் அமைத்துத் தர வேண் டும் என்றும் சி.பொன்னுசாமி கேட்டுக் கொண் டார். அத்துடன் திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்திற்கு நொய்யல் ஆற்றில் இருந்து மங்கலம் நல்லம்மன் தடுப்பணை வழியாக தண்ணீர் வந்து நிறைகிறது. அங்கிருந்து வெளியேறும் நீர் வாய்க்கால் வழியாக சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும். வாய்க்கால் செப்பனிடப்படாமல் முட்புதராக  உள்ள நிலையில் வெளியேறும் நீர் விவசாயி களின் பயிர்களை சேதப்படுத்துகிறது. குள்ளே கவுண்டன் புதூர் அருகில் உள்ள  வீட்டு கட்டிடங்களை பாதிக்கும் நிலை ஏற்படு கிறது. எனவே மழைக் காலத்திற்கு முன்பே வாய்க்காலை சீரமைக்க வேண்டும். அதேபோல் சோமனூர் மின் கோட்டம் மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவ லகத்திற்கு உட்பட்ட ஏழு உதவி மின் பொறியா ளர் அலுவலகங்களில் பொது மக்கள் கருத்து கேட்காமல் திருப்பூர் மின் கோட்டத்திற்கு மாற்றியதால் மின் நுகர்வோர் பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட் பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங் களை திருப்பூர் மின் கோட்டத்துக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்றும் சி.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓய்வூதியர் சங்க மாநாடு

சேலம், ஜூலை 31- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும் என ஓய்வூதியர் சங்க சேலம் மாவட்ட 4 ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் சேலம் மாவட்ட -4 ஆவது மாநாடு சேலம் மாநகரம் விபி  சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் (பொறுப்பு) எ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ரா.சுப்ரமணி யம் முன்வைத்தார். விலைவாசி உயர்வுக்கு ஏற்ற மூன்று சதவீத அக விலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட தலைவராக ஆர்.ஜோதி மதன், மாவட்ட செயலாளராக இரா.சுப்ரமணி யம், மாவட்டப்பொருளாளராக ஏ.அருணகிரி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.