தருமபுரி, ஜூலை 30- 7ஆவது ஆசிய சாம்பியன் ஹாக்கி கோப்பைக்கு ஞாயிறன்று தருமபுரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து 7ஆவது ஆசியக் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஹாக்கி போட்டிகள் தமிழ் நாட்டில் முதல் முறையாக நடை பெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ் தான், மலேசியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய அணிகள் கலந்து கொள்கின்றன. 7ஆவது ஆசிய ஹாக்கி போட்டி யில், இந்திய அணியில், அரியா லூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் கலந்து கொள்கிறார். ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் தொடருக்கான கோப்பை மற்றும் சின்னம் கடந்த ஜூலை 20ஆம் தேதி யன்று தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு த் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சின்னத்தை அறிமுகப் படுத்தினார். தமிழ்நாட்டில் நடை பெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியை பிரபலப்படுத் தும் விதமாக, இதில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை ஒவ்வொரு மாவட் டத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களிடம் அறிமுகம் செய் யப்பட்டு வருகிறது. அதனடிப்படை யில் வருகை தந்த ஹாக்கி சாம் பின்ஸ் கோப்பையை தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தே.சாந்தி வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை யேற்று, ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையினை அறிமுகப்படுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி கல்லூரி மாணவர்கள் விளையாட்டு வீரர் கள் ஹாக்கி பரிசு கோப்பைக்கு வர வேற்பு கொடுத்தனர்.