சேலம், செப்.11- போலி ஆவணம் தயாரித்து தனது வீட்டை அபகரிக்க முயற்சித்து வரும் அதிமுக பேரூராட்சி அவைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலு வலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார ளித்துள்ளார். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கண்ணனூர் மாரியம் மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாரி முத்து, அவரது மனைவி பெரியநாயகம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புகார் மனு ஒன்றை அளித்த னர். இதன்பின் அவர்கள் செய்தியாளர் களிடம் கூறுகையில், கண்ணனூர் மாரி யம்மன் கோவில் அருகே 1500 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து, அதிமுகவைச் சேர்ந்த பேரூ ராட்சி அவைத்தலைவர் கோவிந்தராஜ் மூலம் ரூ.10 லட்சம் வாங்கினோம். வீடு கட்டிய நிலையில், பெற்ற பணத்திற் கான வட்டி சரியாக கட்டி வந்த நிலை யில், தற்போது அசல், வட்டி சேர்த்து உடனடியாக தர வேண்டும் எனக்கூறி தங்களை தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில், எங்களுக்கு தெரியாம லேயே போலியாக ஆவணம் தயாரித்து கோவிந்தராஜ், எங்களது நிலத்தை அப கரிக்க முயற்சி செய்கிறார். இதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தையில் பேசி யும், அடித்து கொலை மிரட்டல் விடுத் தார். இச்சம்பவம் குறித்து காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல், அதிமுகவைச் சேர்ந்த நபருக்கு சாதகமாக போலீசார் செயல்பட்டு வருகின்றனர். தற்போது வீட்டில் வாழ விடாமல் கொலை மிரட்டல் விடுத்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இதனால் எங்கள் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி யாக உள்ளது. எங்கள் உயிருக்கு பாது காப்பு இல்லாத சூழ்நிலையும் உள்ளது. னவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுத்து வரும் அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.