அவிநாசி,ஏப்.25 அவிநாசி அருகே கிராமப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முறையான மின்சாரம் வழங்க வேண்டி மின்வாரிய அலுவலகத் தில் மனு அளித்தனர். தண்டுக்காரபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த நூற் றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அவிநாசியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறி யாளரிடம் அளித்த கோரிக்கை மனு வில், ஏப்ரல் 19ஆம் தேதியிலி ருந்து விவசாயிகள் பயன்படுத்தி வரும் இலவசம் மின்சாரமானது குறைந்த அளவு சப்ளையில் கிடைத்து வருகிறது. தற்பொழுது பயிர்கள் மற்றும் வாழைகள் அறு வடை தருணத்திற்கு வந்துள்ளது. இந்த தருணத்தில் இலவச மின்சா ரம் கிடைக்காமல் மின் மோட்டார் இயக்க முடியாத சூழ்நிலை உருவா கியுள்ளது. இதன் காரணமாக விவ சாயிகளின் வாழ்வாதாரம் முற்றி லும் கேள்விக்குறியாகி உள்ளது. உடனடியாக முன்பு வழங்கப்பட்டி ருந்த மும்முனை மின்சாரத்தை தடையின்றி கிடைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மின்வாரிய அலு வலகத்தை முற்றுகையிட முயற் சித்த விவசாயிகளை, காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சம ரசம் ஏற்பட்டதை அடுத்து, விவ சாயிகள் செயற்பொறியாளரிடம் மனு அளித்துவிட்டு, பின்னர் கலைந்து சென்றனர்.