districts

img

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை

கோவை, ஜூலை 31- பொதுமக்களை அச்சுறுத்தியும், விளை பயிர்களை சேதப்படுத்தி யும் வந்த மக்னா யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வனப்பகுதியை விட்டு வெளி யேறி விவசாய நிலங்களை சேதப் படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து கோவை, டாப்சிலிப்பில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர். ஆனால்,  அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் சுற்றி திரிந் தது. கோவை மாநகர பகுதிகளிலும் அந்த யானையானது சுற்றி திரிந் தது. இதன்பின் அந்த யானையை பிடித்து வனத்துறையினர் மீண்டும் வனத்தில் விட்டனர். இருப்பினும் அந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி கிராமத்தில் முகா மிட்டிருந்தது. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக் கையாக வைத்திருந்தது. கடந்த 4 மாதங்களாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிவதால் அந்த யானையை  பிடிக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து யானையை கண்காணிக்க வனத்துறையினர் தனிக்குழுவும் அமைத்தனர். மேலும், யானையின் நடமாட் டத்தை கண்காணிக்கவும், அதனை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கவும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்த் தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு சர ளப்பதியில் நிறுத்தப்பட்டன. அதன்மூலம் யானையின் நட மாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மக்னா யானையை உடனே பிடிக்க வேண்டும் என வலி யுறுத்தி, மக்கள் போராட்டமும் நடத் தினர். இதையடுத்து வனத்துறையி னர் மக்னா யானையை மயக்க  ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய் தனர். அதன்படி ஆனைமலை வனச் சரகர் புகழேந்தி, டாப்சிலிப் வனச் சரகர் சுந்தர வடிவேல் தலைமை யில் கால்நடை மருத்துவர்கள் மற் றும் வனத்துறையினர் அடங்கிய குழு யானையை மயக்க ஊசி செலுத்தி  பிடிக்கும் பணியில் இறங்கியது. யானை சுற்றி வரக்கூடிய சரளப்பதி கிராமத்தில் முகாமிட்ட இந்த குழு வினர் மக்னா யானையின் நடமாட் டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திங்களன்று அதி காலை 3 மணியளவில் மக்னா யானை சரளப்பதி ஊருக்குள் புகுந் தது.

இதன்பின் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் சுற்றி திரிந்தது. யானை ஊருக்குள் புகுந்ததை அறிந் ததும் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க சம்பவ  இடத்திற்கு விரைந்தனர். அப்போது விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த மக்னா யானைக்கு வனத்துறையி னர் மயக்க ஊசி செலுத்தினர். சில மணி நேரம் அங்கும், மிங் கும் சுற்றிய யானை பின்னர் அந்த  இடத்தில் அப்படியே நின்று விட் டது. இதையடுத்து வனத்துறையி னர் யானையை ஏற்றுவதற்காக  லாரியை வரவழைத்து, கும்கி யானை சின்னதம்பி உதவியுடன், வனத்து றையினர் மக்னா யானையை லாரிக் குள் ஏற்றினர். பின்னர் பிடிபட்ட மக்னா யானையை வனத்துறை யினர் வால்பாறை வனசரகத்தி லுள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு விட்டனர். கடந்த 4 மாதங்களாக சர ளப்பதி பகுதியில் மக்னா யானை சுற்றி வந்ததால் அந்த பகுதி மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப் பட்டு இருந்தனர். பயிர்களையும் சேதப்படுத்தி வந்ததால் விவசாய மும் பாதிக்கப்பட்டிருந்தது. தற் போது மக்னா யானை பிடிக்கப்பட்ட தும் சரளப்பதி பொதுமக்கள் நிம் மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிக் குள் சுற்றித்திரிந்த யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத் தோம். அதனை ஏற்று தற்போது வனத்துறையினர் பிடித்துள்ளனர். அந்த யானையை அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டும். மேலும் அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், என்ற னர்.