districts

img

கூடுதல் பேருந்து: பட்டாசு வெடித்து வரவேற்பு

கோவை, அக்.31- கோவை அருகில் வீரபாண்டி பகுதி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கப்பட்டது. இதனை பொதுமக்கள், பட்டாசு வெடித்து வரவேற்றனர்.  கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வீர பாண்டி பேரூராட்சி பகுதி முத்தமிழ் நகரில்  அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாதால், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப் பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் கோவை  பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு அளிக்கப் பட்டது. இந்நிலையில், பள்ளி நேரத்தில் கூடுதலாக  பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திங்களன்று முதல் கூடு தல் அரசு பேருந்து இயக்கப்பட்ட நிலையில், பள்ளி   வளாகத் தில் பேருந்தை  பட்டாசு வெடித்து  வரவேற்றனர்.  பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, பேரூராட்சித் தலைவர் பத்மாவதி ஆகியோர் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பள்ளி நேரத்தில் கூடு தல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் சிரமமின்றி சென்றுவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.