அவிநாசி, ஜூலை 11- அவிநாசி அருகே அம்மாபாளை யம் பாரதிநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் ஞாயிறன்று திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றி யம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பாரதிநகர் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கு புதிதாக அலுவலகம் திறக்க ஏற் பாடு செய்யப்பட்டு ஞாயிறன்று திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கிளைச் செயலா ளர் காமராஜ், ராஜ் தேவராஜன் ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதைத் தொடர்ந்து செங்கொடியை கட்சியின் மூத்த தோழர் மணி ஏற்றி வைத்தார். இந்த அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் திறந்து வைத்தார். அனைவராலும் கே.எஸ்.கே என அன்போடு அழைக் கப்படும் கே.கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் ஊழியராக பணி யாற்றி மறைந்த மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் கே.தங்கவேல் ஆகியோரது படங் களை கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துசாமி திறந்து வைத்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை பெயர் பலகையை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம் திறந்து வைத் தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வ ரமூர்த்தி, திருமுருகன்பூண்டி நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவ ராஜன், பார்வதி சிவகுமார்,கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலசுப் பிரமணியம், மோகனசுந்தரம், சண்மு கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சிக் கிளை உறுப்பினர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.