திருப்பூர், டிச. 6 - இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம் பேத்கரின் 66ஆம் ஆண்டு நினைவு தினம் திருப்பூரில் எழுச்சி யுடன் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சி யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், துணைத் தலைவர் சண்முகம், துணைச் செய லாளர் பா.ஞானசேகரன், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன், ரவி, மாதர் சங்கத்தைச் சேர்ந்த அங்கு லட்சுமி, வாலிபர் சங்க வடக்கு மாநகர நிர்வாகி சந்துரு, மாண வர் சங்கத்தைச் சேர்ந்த சுதா, ஷாலினி உள்ளிட்டோர் பங் கேற்று அம்பேத்காரை நினைவு கூர்ந்து, முழக்கங்கள் எழுப்பி னர். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிர மணியம், ஏஐடியுசி நிர்வாகிகள் பி.ஆர்.நடராஜன், என்.சேகர் உள்ளிட்டோரும் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாளர் முகில் ராசு உள்ளிட்டோரும், பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊத்துகுளி ஊத்துக்குளி வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுத்தொழிலாளர் சங்கச் செயலாளர் வி.பி.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலா ளர் மணியன் உள்ளிட்டோர் பங்கேற்று அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.