உடுமலை ஜூலை 15- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே யுள்ள, அமராவதி அணையின் மூலமாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயி ரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதுடன், வழியோர கிராமங்களுக்கு குடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில்,மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், பருவ மழை தீவிரமடைந்துள்ள தால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக , கேரளாவிலு ள்ள மூணாறு, தலையாறு, மறையூர் பகுதி யில் கனமழை பெய்து , பிரதான நீர்வரத்து ஆறான, பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை 5 மணி நிலவ ரப்படி, அணைநீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 83 அடியாக உயர்ந்து, அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 11 ஆயிரத்து 700 கன அடியாக இருந்தது. இதனையடுத்து கரை யோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளியன்று 15 ஆம் தேதி காலை நிலவரப்படி, அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 400 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 87.08 அடியாகவும் இருந்தது. இதனைய டுத்து, பாதுகாப்பு கருதி அணையிலிருந்து மதகுகள் வழியாக ,5 ஆயிரம் கன அடி நீரும், பிரதான கால்வாயில் 350 கன அடி நீரும், ராம குளம், கல்லாபுரம் கால்வாயில் 25 கன அடி என மொத்தம் 5 ஆயிரத்து 380 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில், 87.08 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 8,340 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 5,380 கன அடியாகவும் உள்ளது.