திருப்பூர், பிப்.28- ஒன்றிய அரசின் விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்து சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் கள் சங்கம் சார்பில் ஊத்துக்குளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஊத்துக்குளி ஈஸ்வரன் கோவில் மைதானத் தில் திங்களன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஜி.சம்பத், சி.மூர்த்தி, ஜெ. கந்தசாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கு.சரஸ்வதி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.