தருமபுரி, ஜன.5- தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார். தருமபுரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் குறித்து டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் வெள்ளியன்று ஆய்வு செய் தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தருமபுரி ரயில் நிலையத்தில் 2004 ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்குப் பின்பு பெரிய அளவில் நடை மேடை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி ரயில் நிலையத்தில் பய ணிகள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டு பணிகள் ரூ.15 கோடி யில் மேற்கொள்ளப்பட உள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அருகில் 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. உயர் வகுப்பு பயணிகள் காத் திருப்புக் கூடம், மகளிர் மற்றும் பொதுப்பயணிகள் காத்தி ருப்புக் கூடம் என மூன்று காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நடைமேடையிலும் சுத்திகரிப்பு செய்யப் பட்ட குடிநீர் இயந்திரம், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உள் ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத் தில் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் தற்போது துரித மாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற் கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும், என்றார்.