districts

உள்ளாட்சி உறுப்பினர்களுக்கும் வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கிடுக

உதகை, ஆக.1- உள்ளாட்சி உறுப்பினர்களுக்கும் வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்க அர சுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உதகை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். உதகை நகராட்சி மாதாந்திர கூட் டம் திங்களன்று தலைவர் வாணீஸ் வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஏகராஜ், பொறியாளர் சேர்மகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் உள் ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதி யம் வழங்கியதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.  இதில், மன்ற உறுப்பினர் முஸ் தபா பேசுகையில், நாடாளுமன்ற, சட் டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது போல, நகராட்சி கவுன்சிலர்களுக்கு வார்டு  மேம்பாட்டு நிதி ஒதுக்க அரசுக்கு பரிந் துரைக்க வேண்டும். குன்னூர் நகர் மன்றத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் பூக் களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதேபோல் உதகை யிலும் தடை விதித்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.

கொரோனா காலத் தில் உள்ளாட்சி கடைகளுக்கான வாடகையை ரத்து செய்து அர சாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேண் டும், என்றார். இதன்பின் கவுன்சிலர் கள் பேசுகையில், நகராட்சி குடியி ருப்புகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். காந்தல் ஸ்லேட் டர் ஹவுஸ் பகுதியில் பாதாள சாக் கடை பிரச்சனையை தீர்க்க வேண் டும். பாரதியார் நகரில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். பிங்கர்போஸ்ட் முதல் தோப்புலைன் வரையுள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும், என்றனர். இதைத்தொடர்ந்து நகர்மன்ற துணைத்தலைவர் ரவிகுமார் பேசுகை யில், நகரின் மையப்பகுதியில் உள்ள கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப் பெருக்கு பிரச்சனைக்கு தீர்வு காண ஏரியை தூர்வார வேண்டும். இது குறித்து நீர்வளத்துறை அமைச்ச ருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. உதகை சுற்றுலா நகரம் என்பதால், நகரின் முக்கிய சாலைகளில் ஏற்ப டும் பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். இதற்கு தேவை யான உபகரணங்களை வாங்கி இருப் பில் வைத்துக்கொள்ள வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் விவாதத் திற்கு கொண்டு வரப்பட்ட 31 தீர்மா னங்களில், 30 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.