சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வேலை ஊதியத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட் டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: விவசாயத்தில் நவீன எந்திரமய மாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வேலை நாட்கள் குறைந்து, விவசாய வேலைகளை மட்டுமே நம்பியிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலை - வருமானம் இழந்துள்ள னர். கிராமப்புறங்களில் வாழும் விவ சாயக் கூலித்தொழிலாளர்களுக்கு ஊரக வேலை திட்டம் உள்ளதைப் போல பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப் புற தொழிலாளர்களுக்கு வேலை திட் டத்தை உருவாக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட கிராமப்புற தன்மை கொண்ட பேரூராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தியது. இந் நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற் றம் ஏற்பட்டதும் 2021 ஆம் ஆண்டு நகர்ப்புற வேலை ஊதியத் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட் டது
. முதல் கட்டமாக 37 பேரூராட்சி களிலும், 7 நகராட்சிகளிலும், 7 மாநக ராட்சிகளில் தலா ஒரு வார்டிலும், ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடந்த அதி முக ஆட்சிக் காலத்தில் பல லட்சக் கணக்கான மக்கள் திரண்டு போராட் டங்கள் நடத்தியபோதும் அந்த கோரிக் கையை அன்றைய அதிமுக அரசு அலட்சியப்படுத்திய நிலையில், தமிழ் நாடு அரசு திட்டத்தை அறிவித்து செயல் படுத்துவது பாராட்டுக்குரிய அம்ச மாகும். செயல்படுத்தப்படும் நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு சிறு பகுதியினருக்கு வேலை கிடைத்து வருகிறது. முதலாம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து இரண்டு ஆண்டு களாக வேலைத் திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. அரசு அறிவித்தவாறு அடுத்த கட்டமாக பேரூராட்சிக ளுக்கு வேலைத்திட்டம் விரிவுபடுத் தப்படவில்லை. நிதி ஒதுக்கீடும் இல்லை. இதனால் ஏற்கனவே அமல் படுத்தப்பட்ட பல பேரூராட்சி, நக ராட்சிகளில் திட்டம் நிதியின்றி தற் போது நிறுத்தப்பட்டுள்ளது. நகர்ப் புற வேலையின்மை மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் கிடைத்து வந்த வேலையும் கிடைக்காமல் நகர்ப்புற தொழிலாளர்கள் திண்டாட் டத்தில் உள்ளனர். ஆகவே, வரும் நிதிநிலை அறிக் கையில் தமிழ்நாடு அரசு குறைந்த பட்சம் ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தும், கிரா மப்புற தன்மை கொண்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிவினர் வசிக்கும் பேரூராட்சிகள் அனைத்திற்கும் திட்டத்தை விரிவு படுத்தி செயல்படுத்திடவும், ஒதுக்கப் பட்ட நிதியில் தற்போதும் மீதம் இருக் கும் பேரூராட்சிகளில் தொடர்ச்சியாக வும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலையும் அளிக்க வேண்டும். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.