உடுமலை, பிப்.10- அறுவடை காலத்தில் மக்காச்சோள விலையை வியாபாரிகளும் கால்நடை தீவன நிறுவனங்களும் சிண்டிகேட் அமைத்து செயற்கையாக விலை குறைப்பு செய்வதால் விவசாயிக ளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக வும், இதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளனர். உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காச்சோளம் பயிர் செய்யும் போது குவிண்டால் ஒன் றுக்கு ரூபாய் 2500 வரை விலை இருக் கும். ஆனால் அறுவடை காலத்தில் குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 1700 முதல் 1800 வரை வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து விடுகின்றனர். ஒரு ஏக்கர் மக்காச்சோளம் பயிர் செய்ய விதை, உரம், பூச்சிமருந்து மற்றும் அறுவடை என ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. தற்பொழுது அதீத மழை பெய்த கார ணத்தால் விளைச்சலும் குறைவு. மேலும், மக்காச்சோள தட்டுகளையும் விற்பனை செய்ய முடியாத சூழல் உள் ளது. குறைவான விளைச்சல் உள்ள நிலையில் விலை குறைப்பு செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படு கிறது. விவசாயிகள் வருடம் முழுவதும் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்வ தால் இப்பகுதிகளில் கால்நடைகள் மற்றும் கோழி தீவன நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இந்நிறுவ னங்களுடன் வியாபாரிகளும் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக விலை குறைப்பு செய்து விடுகின்றனர். விவ சாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர்.