districts

12 ஆண்டுகளாக தங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை

நாமக்கல், டிச.30- இலவச வீட்டுமனை கேட்டு 12 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் என பலரி டம் மனு அளித்தும் இதுவரை தங்கள் கோரிக்கை  நிறைவேற்றப்படவில்லை என குறவர் சமுதாயத் தைச் சேர்ந்த பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சந்தைப் பேட்டை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக குறவர்  சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குடும்பத்தி னருடன் வசித்து வந்தனர். இவர்களின் தொழில்  சவுரி முடி பின்னுதல் ஆகும். கடந்த 15 ஆண்டுக ளுக்கு முன்பு சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து இந்த சமுதாய மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அப்போதிலிருந்து சாலையோரங்களில் டென்ட் அமைத்து தங்கி வந்தனர். தங்கள் பிள்ளைகள் வளர்ந்ததை தொடர்ந்து ஊருக்குள் வீடு வாட கைக்கு எடுத்து தங்க முயற்சி செய்தனர். குறவர்  சமுதாயத்திற்கு ஊருக்குள் வீடு கொடுக்காத தால் அதிகமான வாடகை கொடுத்து இவர்கள்  தங்கி வந்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கும், வட்டார நிர்வாகத் திற்கும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பி யும் இவர்களது வீட்டுமனை கோரிக்கை நிறைவேற் றப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புறம் போக்கு இடத்தில் குடிசைகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கிய பின்னரும், அக்கம்  பக்கத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த தால் இவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி  உள்ளனர். தற்போது ஊருக்குள் தங்குவதற்கு வீடு  கிடைக்காமலும், அதிக வாடகை கொடுத்தும் குடியிருந்து வருவதால் தங்கள் வருமானத்தின் பெரும் பகுதி வாடகைக்கு சென்று விடுவதாகவும்  மற்ற செலவுகளுக்கு மிகவும் சிரமப்படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளதென அப்பகுதி தெரிவித்துள்ள னர். இந்நிலையில், மல்லசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக் குள் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள தால், மல்லசமுத்திரம் பகுதியில் வசிக்கும் மேற் கண்ட சமுதாயத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்  என்று முகாமில் மனு அளித்தனர். இதுகுறித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்த உமா, சுமதி ஆகியோர் கூறுகையில், கடந்த 40  ஆண்டுகளுக்கு முன்பு சந்தைப்பேட்டை பகுதி யில் வசித்து வந்தோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு  எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விட்ட னர். 12 ஆண்டுகளாக வீட்டு மனை கேட்டு நாங்கள்  மாவட்ட ஆட்சியர், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் என பலரிடமும் சென்று சந்தித்து  மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. வருவாய்த்துறையினர் ஒரு இடத்தை காட்டி குடிசைகள் அமைத்துக் கொள்ளுமாறு ஒதுக்கினர். ஆனால், அருகிலிருந்த மக்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் ஊருக் குள் எங்களுக்கு வீடும் கொடுப்பதில்லை. இல்லை யெனில் வீட்டு வாடகை அதிகம் கொடுத்து வசிக்க  வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை வீட்டு வாடகை கொடுத்து விட்டு வாழ்க்கைக்கு என்ன செய்வது?  என தெரியவில்லை. நாங்கள் சவுரி முடி செய்யும் தொழில் செய்து  வருகிறோம். 30 குடும்பத்தினருக்கு வசிக்க வீட்டு  மனை வேண்டும். எனவே அரசு எங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும், என்றனர்.