districts

img

ஒன்றிய அரசை கண்டித்து 5 இடங்களில் மறியல் கோவையில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு

கோவை, பிப்.5- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண் டித்துகோவையில் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மத் திய தொழிற்சங்கங்கள் முடிவெ டுத்துள்ளன. ஒன்றிய அரசுக்கு எதிராக பிப். 16-ஆம் தேதி அகில இந்திய அள விலான வேலைநிறுத்த போராட் டத்தை மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். இப்போராட் டத்தை கோவையில் வெற்றிகர மாக நடத்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ள னர்.  ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார் பில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் பிப்.16-ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்த நிலை யில் கோவை மாவட்ட மத்திய  தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவ சாயிகள் முன்னணி மற்றும் வெகு ஜன அமைப்புகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. கோவை  சிஐடியு மில் சங்க அலுவலகத் தில் நடைபெற்ற இக்கூட்டத் திற்கு சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். இதில், ஏஐடி யுசி தலைவரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.ஆறுமுகம், எம்எல்எப் மு.தியா கராஜன், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜமணி, ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் செயலாளர் சி.தங்க வேல், எல்பிஎப் வணங்காமுடி, ஏஐசிசிடியு வெங்கடாச்சலம் உள்ளிட்ட தலைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் அவசியம் குறித்து பேசினர். இந்த  கூட்டத்தின் முடிவாக, ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங் களின் அறைகூவல் இயக்கத்தை  கோவையில் வெற்றிகரமாக நிறை வேற்றுவது, இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் வால் பாறை, பொள்ளாச்சி, கோவை ரயில் நிலையம், சூலூர், மேட்டுப் ்பாளையம் ஆகிய 5 இடங்களில் வேலைநிறுத்த மறியல் போராட் டத்தை நடத்துவது. இப்போராட் டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டுவது என முடிவெடுக்கப்பட்டது.